ஈரானில் ஒரே நாளில் 640 தாக்குதல்கள் : 68 பேர் உயிரிழப்பு

Sunday, March 22nd, 2026 at 8:01 (SLT)

ஈரானின் 17 மாகாணங்கள் மீது கடந்த வெள்ளிக்கிழமை (20) மாத்திரம் 640 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்களைக் கொண்ட செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

பிரித்தானியா – பிரான்ஸ்: ஜெர்மனியை தாக்கக்கூடிய ஏவுகணைகள் ஈரானிடம் இஸ்ரேல் எச்சரிக்கை

Sunday, March 22nd, 2026 at 7:56 (SLT)

ஈரான் தனது நீண்ட தூர ஏவுகணை திறனை நிரூபிக்கும் வகையில், இந்தியப் பெருங்கடலில் உள்ள அமெரிக்க – பிரித்தானியா இராணுவத் தளமான டியேகோ கார்சியா (Diego Garcia) நோக்கி சுமார் 4,000 கிலோமீட்டர் தொலைவு கொண்ட ஏவுகணைகளை ஏவியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

மயக்க மருந்து கொடுத்து பெண்ணைக் கிணற்றில் வீசிய தம்பதியினர் கைது

Sunday, March 22nd, 2026 at 7:48 (SLT)

மட்டக்களப்பு, தாந்தாமலை – நெல்லிக்காடு வயல் பிரதேசத்திலுள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, 24 மணித்தியாலங்களுக்குள் துரிதமாக செயற்பட்ட பொலிஸார், சந்தேகநபர்கள் மூவரைக் கைது செய்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

ஈரானுக்கு 48 மணிநேர ‘டெட்லைன்’ கொடுத்த ட்ரம்ப்

Sunday, March 22nd, 2026 at 7:46 (SLT)

ஹோர்முஸ் நீரிணையை அடுத்த 48 மணிநேரத்திற்குள் திறந்துவிடாவிட்டால், ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் அழிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். தனது ‘Truth Social’ சமூக வலைதளத்தில் பதிவொன்றை இட்டே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஈரானின் ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலில் 100 பேர் வரை காயம்

Sunday, March 22nd, 2026 at 7:43 (SLT)

இஸ்ரேலின் ஆர்ட் மற்றும் டிமோனா ஆகிய இரு நகரங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை 01.20 மணியளவில் ஆர்ட் நகரின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மாத்திரம் 88 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க >>>

அமெரிக்காவுக்கு அனுமதி இல்லை : இந்திய ராணுவத் தளங்களைப் பயன்படுத்தத் தடை

Sunday, March 22nd, 2026 at 6:16 (SLT)

ஈரான் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்த அமெரிக்காவுக்கு இந்திய ராணுவத் தளங்களைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகளுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இது குறித்து மார்ச் 21, 2026 அன்று இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ விளக்கத்தில், “தற்போதைய போர்ச் சூழலில் எந்தவொரு வெளிநாட்டு ராணுவமும் இந்தியத் தளங்களைப் பயன்படுத்தவோ அல்லது இங்கிருந்து தாக்குதல்களை நடத்தவோ அனுமதி அளிக்கப்படவில்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் நடுநிலைமைக் கொள்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை மத்திய அரசு இதன் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஈரானில் சிறை பிடிக்கப்பட்ட பிரித்தானிய தம்பதி : மனிதக் கேடயங்களாக பயன்படுத்தப்படுவதாக முறைப்பாடு

Saturday, March 21st, 2026 at 7:21 (SLT)

ஈரானில் உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள லிண்ட்சே (Lindsay) மற்றும் கிரெய்க் ஃபோர்மேன் (Craig Foreman) ஆகிய பிரித்தானிய தம்பதியினரின் நிலை குறித்து அவர்களது குடும்பத்தினர் கடும் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு

Saturday, March 21st, 2026 at 7:16 (SLT)

அனைவரினதும் உரிமைகளும் சுதந்திரமும் உறுதிப்படுத்தப்பட்ட, அமைதி மற்றும் சுபீட்சம் நிறைந்த தேசமொன்றைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

நேட்டோ உறுப்பு நாடுகளை “கோழைகள்” என விமர்சித்த டொனால்ட் டிரம்ப்

Saturday, March 21st, 2026 at 7:08 (SLT)

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நேட்டோ உறுப்பு நாடுகளை “கோழைகள்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்ல அனுமதிப்பது அந்த நாடுகளுக்கு ஒரு “எளிதான” பணியாக இருந்தாலும், அவர்கள் அதில் தலையிட மாட்டார்கள் என்று அதிபர் கூறுகிறார்.

மேலும் வாசிக்க >>>

துருக்கி மற்றும் ஓமன் மீதான தாக்குதல்களுக்கும் ஈரானுக்கும் எந்த தொடர்பும் இல்லை : உச்ச தலைவர் கமேனி

Saturday, March 21st, 2026 at 7:04 (SLT)

துருக்கி மற்றும் ஓமானைக் குறிவைத்து சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் ஈரானிய ஆயுதப் படைகளுக்கோ அல்லது அவற்றின் கூட்டாளிகளுக்கோ எந்தத் தொடர்பும் இல்லை என்று ஈரானிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை

Saturday, March 21st, 2026 at 7:01 (SLT)

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

புனித நோன்புப் பெருநாள் இன்று

Saturday, March 21st, 2026 at 6:59 (SLT)

இலங்கை வாழ் முஸ்லிம் சகோதரர்கள் இன்று (21) புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர். நோன்புப் பெருநாளை கொண்டாடும் அனைத்து முஸ்லிம் வாசகர்களுக்கும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் அத தெரண இணைய தளம் மகிழ்ச்சி அடைகிறது.

மேலும் வாசிக்க >>>

பிரித்தானிய தளங்களை அமெரிக்கா பயன்படுத்த அனுமதி

Saturday, March 21st, 2026 at 6:53 (SLT)

ஹோர்முஸ் நீரிணையைக் குறிவைத்து ஈரானிய தளங்கள் மீது தாக்குதல்களை நடத்துவதற்கு, அமெரிக்கா தனது இராணுவத் தளங்களைப் பயன்படுத்துவதற்கு பிரித்தானியா அனுமதி அளித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஈரானில் உயிரிழப்பு 3100 ஐ கடந்தது

Friday, March 20th, 2026 at 11:17 (SLT)

அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து ஈரானில் 3 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் ஆர்வலர்களின் செய்தி நிலையம் இந்த புதிய அறிவிப்பை வௌியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளித்து, இத்துறை எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்ள அரசாங்கம் அதிகபட்சமாக தலையிடும் : ஜனாதிபதி

Friday, March 20th, 2026 at 11:15 (SLT)

ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளித்து, இத்துறை எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்ள அரசாங்கம் அதிகபட்சமாக தலையிடும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.மத்திய கிழக்கில் உருவாகியுள்ள போர்ச் சூழல் காரணமாக இந்நாட்டின் ஏற்றுமதித் துறைக்கு ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிகொள்வதற்கு எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக, இத்துறையின் பிரதான ஏற்றுமதியாளர்கள் மற்றும் இலங்கை வர்த்தக சபை பிரதிநிதிகளுடன் வியாழக்கிழமை (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>