ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் ராணுவத் தாக்குதல், சர்வதேச சட்டங்களுக்குப் புறம்பானது என்றும், இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு “பேரழிவுகரமான அரசியல் தவறு” என்றும் ஜெர்மனி அதிபர் பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மையர் (Frank-Walter Steinmeier) சாடியுள்ளார். பெர்லினில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வெளியுறவுக் கொள்கை, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய அமெரிக்க-ஜெர்மனி உறவுகளில் மிகப்பெரிய விரிசலை ஏற்படுத்தியுள்ளதாகக் கவலை தெரிவித்தார். குறிப்பாக, ஈரானிடமிருந்து அமெரிக்காவிற்கு உடனடி அச்சுறுத்தல் இருந்ததாகக் கூறப்படும் காரணங்கள் எதுவும் நம்பத்தகுந்ததாக இல்லை என்றும் அவர் நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் வாசிக்க >>>














