முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

Monday, April 28th, 2025 at 10:05 (SLT)

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று திங்கட்கிழமை (28) முன்னிலையாகியுள்ளார். ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் நிதி மோசடி வழக்கு தொடர்பாக வாக்கு மூலம் அளிப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இந்தியா – பாக்கிஸ்தான் யுத்தம் ஏற்பட்டால் இலங்கையை இந்தியாவின் ஒரு பகுதியாக எண்ணக்கூடிய நிலைமை ஏற்படலாம் : தொலவத்த

Sunday, April 27th, 2025 at 10:03 (SLT)

அணிசேரா வெளிநாட்டு கொள்கையிலிருந்து வெளியேறி தற்போதைய அரசாங்கம் பக்கசார்பான கொள்கையையே பின்பற்றுகிறது. துரதிஷ்டவசமாக இந்தியா – பாக்கிஸ்தான் யுத்தம் அறிவிக்கப்பட்டால் இலங்கையை இந்தியாவின் ஒரு பகுதியாக எண்ணக்கூடிய நிலைமை கூட ஏற்படலாம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

ஸ்ரீ தலதா வழிபாட்டின் இறுதி நாள் இன்று

Sunday, April 27th, 2025 at 9:58 (SLT)

உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களால் மிகவும் மதிக்கப்படும், இந்நாட்டில் பௌத்தர்களின் சிகரமாகத் திகழும் மிகவும் புனித தந்த தாதுவை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மக்கள் தங்கள் கண்களால் காணும் வாய்ப்பை வழங்கும் சிறி தலதா வழிபாட்டின் இறுதி நாள் இன்றாகும்.

மேலும் வாசிக்க >>>

உள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட நாள் இன்று

Sunday, April 27th, 2025 at 9:55 (SLT)

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட நாளாக இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு சென்று விநியோகிக்கும் பணி நாளை மறுதினம் வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஈரானின் துறைமுகமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலி

Sunday, April 27th, 2025 at 9:51 (SLT)

தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் உள்ள துறைமுகமொன்றில் ஏற்பட்ட திடீர் வெடிப்பில் சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

ஒரே நேரத்தில் இரு மாணவிகளை காதலித்த விவகாரம்: தவறான முடிவெடுத்த பல்கலைக்கழக மாணவன்

Sunday, April 27th, 2025 at 9:47 (SLT)

காதல் பிரச்சினை காரணமாக பல்கலைக்கழக மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். யாழ். பல்கலைகழகத்தில் கல்வி கற்கும் 24 வயதான கொட்டகலையைச் சேர்ந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஊழல், படுகொலை, ஆள் கடத்தல்களில் ஈடுபட்டோர், யாருக்கும் இம்முறை தப்பிக்க முடியாது : பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர

Saturday, April 26th, 2025 at 8:18 (SLT)

ஊழல் மோசடியில் ஈடுபட்டோர், படுகொலைகளில் ஈடுபட்டோர், ஆட் கடத்தல்களில் ஈடுபட்டோர், யாருக்கும் இம்முறை தப்பிக்க முடியாது. அரசாங்கம் இந்த விடயத்தில் உறுதியாக இருக்கின்றது. நாம் சரியான விடயத்தை முன்வைக்கின்றோம். கடந்த காலங்களில் சட்டத்தில் இருந்த ஓட்டைகளை பாவித்து யாரும் தப்பித்தார்கள் என்றால் அது இனி வரும் காலங்களில் இடம்பெற முடியாது. என வெளிவிவகாரப் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு பொலிசார் கோரிய தடையுத்தரவை நிராகரித்த நீதிமன்றம்

Saturday, April 26th, 2025 at 8:13 (SLT)

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்காவின் வருகையை முன்னிட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள தடையுத்தரவு கோரிய வவுனியா பொலிசாரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

மரபு ரீதியாக மூடப்பட்டது நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் பேழை 

Saturday, April 26th, 2025 at 8:07 (SLT)

நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் திருவுடல் பேழை மரபு ரீதியாக வெள்ளிக்கிழமை (25) இரவு மூடப்பட்டது. இந்நிலையில், திருவுடல் தாங்கிய பேழை இன்று சனிக்கிழமை (26) நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

மேலும் வாசிக்க >>>

தலதா யாத்திரைக்குச் சென்ற மூவர் உயிரிழப்பு

Saturday, April 26th, 2025 at 8:01 (SLT)

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள கௌதம புத்தரின் புனிதப் பல் நினைவுச்சின்னத்திற்கு மரியாதை செலுத்தச் சென்றவர்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்று, கண்டி தேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் இரேஷா பெர்னாண்டோ தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

28ஆம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையாகும் ரணில்

Saturday, April 26th, 2025 at 7:59 (SLT)

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 28 ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு இலஞ்ச – ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

தேசிய துக்க தினம் பிரகடனம் : தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு அறிவிப்பு

Saturday, April 26th, 2025 at 6:19 (SLT)

நித்திய இளைப்பாறிய திருத்தந்தை பிரான்சிஸின் நல்லடக்க ஆராதனையை முன்னிட்டு இன்றைய தினம் தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.தேசியக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு பொது நிர்வாக அமைச்சு, அனைத்து அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

15 நிமிடங்கள் மோடி அநுரகுமார பேச்சு, பயங்கரவாத தாக்குதலை கண்டிப்பதாக அறிவிப்பு

Friday, April 25th, 2025 at 18:12 (SLT)

26 பேர் கொல்லப்பட்ட இந்தியாவின் காஷ்மீரின் பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று (25) பிற்பகல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதியும், பிரதமரும் எளிமையாக இருக்கிறார்கள் சுகபோகம் அனுபவிப்பதில்லை, மாளிகையிலும் தங்குவதில்லை

Friday, April 25th, 2025 at 18:09 (SLT)

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் ஜனாதிபதி மாளிகையிலோ, அலரிமாளிகையிலோ வசிப்பதில்லை. ஏனெனில் இவற்றை பராமரிப்பதற்கு பல மில்லியன் ரூபா மாதாந்தம் செலவாகும் என்று அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பிரான்ஸ் பள்ளியில் கத்திக்குத்து: ஒருவர் பலி: மூவர் காயம்

Friday, April 25th, 2025 at 18:05 (SLT)

மேற்கு பிரான்சில் உள்ள ஒரு பள்ளியில் நேற்று வியாழக்கிழமை நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒரு மாணவர் கொல்லப்பட்டார் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். சந்தேகத்திற்குரிய தாக்குதல் நடத்திய 15 வயது மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நான்டெஸுக்கு அருகிலுள்ள டூலோனில் உள்ள தனியார் நோட்ரே-டேம்-டி-டவுட்ஸ்-எய்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் இரண்டு வகுப்பறைகளுக்குள் நுழைந்து தாக்குதல்களை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>