மின் கட்டணத்தை அதிகரித்தால் மாத்திரமே அடுத்த கட்ட கடன் தொகை ; சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனையை அரசாங்கம் ஏன் மறைத்தது? : ஹர்ஷ டி சில்வா கேள்வி

Thursday, May 1st, 2025 at 10:29 (SLT)

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் தொடர்பில் மிக முக்கிய உண்மைகளை அரசாங்கம் மறைத்திருக்கிறது. மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் மாத்திரமே அடுத்த கட்ட கடன் தொகை வழங்கப்படும் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளதை ஏன் அரசாங்கம் நாட்டு மக்களிடமிருந்து மறைத்தது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கேள்வியெழுப்பினார்.

மேலும் வாசிக்க >>>

பாகிஸ்தானுக்கு சொந்தமான அனைத்து விமானங்களும் இந்திய வான் பரப்பிற்குள் நுழையத் தடை

Thursday, May 1st, 2025 at 10:19 (SLT)

பாகிஸ்தானுக்கு சொந்தமான மற்றும் பாகிஸ்தான் நிறுவனங்களால் இயக்கப்படும் அனைத்து விமானங்களும் தனது வான் பரப்பிற்குள் நுழைய இந்திய அரசாங்கம் தடை விதித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

மேலும் வாசிக்க >>>

யாழில். 500 கிலோ மஞ்சளுடன் ஒருவர் கைது

Wednesday, April 30th, 2025 at 7:41 (SLT)

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கடத்தி வரப்பட்ட 500 கிலோ கிராம் மஞ்சளுடன் ஒருவர் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மின்சார செலவுகள் மற்றும் விலை நிர்ணயம் தொடர்பாக ஒரு வழிமுறை தேவை : சர்வதேச நாணய நிதியம்

Wednesday, April 30th, 2025 at 7:35 (SLT)

மின்சார செலவு மீட்பு விலை நிர்ணயத்தை மீட்டெடுப்பது தொடர்பான முந்தைய நடவடிக்கைகளை செயல்படுத்துதல் மற்றும் தானியங்கி மின்சார விலை நிர்ணய பொறிமுறை தொடர்பான அத்தியாவசிய சீர்திருத்தங்களை செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை IMF அரசாங்கத்திற்கு வலியுறுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இந்தியாவுடனான ஒப்பந்தங்கள் சட்டவிரோதமானவை : உதய கம்மன்பில

Tuesday, April 29th, 2025 at 11:52 (SLT)

இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள மின்சக்தி மற்றும் எரிபொருள் தொடர்பான திட்டத்துக்காக இலங்கை வரும் இந்தியர்களுக்கு, ஜனாதிபதிக்கு நிகரான விடுபாட்டுரிமைகள் வழங்கப்படவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

முன்னாள் அமைச்சர்கள் மூவர் மீது விரைவில் சட்ட நடவடிக்கை : ஜனாதிபதி அநுர

Tuesday, April 29th, 2025 at 11:49 (SLT)

பதிவு செய்யப்படாத வாகனங்களைப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட, முன்னாள் அமைச்சர்கள் மூவர் மீது விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.பேருவளையில் நேற்றுமுன்தினம் (27) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

மனைவியையும், மனைவியின் குடும்பத்தினரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கிய கணவன் தலைமறைவு

Tuesday, April 29th, 2025 at 11:47 (SLT)

மனைவியையும், மனைவியின் குடும்பத்தினரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் கணவன் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருப்பதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

பாணந்துறையில் துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் பலி, மற்றுமொருவர் காயம்

Tuesday, April 29th, 2025 at 7:28 (SLT)

பாணந்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பாணந்துறையிலுள்ள ஹிரணை பகுதியில் நேற்று திங்கட்கிழமை (28) இரவு குறித்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

வெடித்து சிதறிய கண்டெய்னர் கெமிக்கல் ஈரான் வெடி விபத்தில் உயிரிழப்பு 40ஆக உயர்வு

Monday, April 28th, 2025 at 10:56 (SLT)

ஈரானில் பாந்தர் அப்பாஸ் என்ற நகரில் உள்ள துறைமுகத்தில் மிக மோசமான வெடி விபத்து கடந்த சனிக்கிழமை நடந்துள்ளது. 2 நாட்களைக் கடந்தும் தீ தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் நிலையில், இதில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1000+ மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ஈரானை உலுக்கிய இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க அந்நாட்டின் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கு விலை நிர்ணயம்

Monday, April 28th, 2025 at 10:48 (SLT)

அதிகபட்ச சில்லறை விலைக்கு மேல் போத்தலில் அடைக்கப்பட்ட உள்ளூர் குடிநீரை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு ஒரு லட்சம் முதல் ஐந்து மில்லியன் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 30 வேட்பாளர்கள் கைது

Monday, April 28th, 2025 at 10:45 (SLT)

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 30 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த மார்ச் 3 ஆம் திகதி முதல் இன்று (28) காலை 6 மணி வரையான காலப்பகுதியில் தேர்தல் விதிமுறையை மீறியதற்காக குறித்த வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

ஐஸ் போதைப்பொருளுடன் முச்சக்கரவண்டியை திருடியவர் கைது

Monday, April 28th, 2025 at 10:42 (SLT)

முகத்துவாரம் பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கொழும்பு வடக்கு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, மேற்படி பிரதேசத்தில் கொழும்பு வடக்கு குற்றத் தடுப்பு பிரிவினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் 10 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

மேலும் வாசிக்க >>>

ரயில் முன் பாய்ந்து ஒருவர் உயிர்மாய்ப்பு : மீரிகமவில் சம்பவம்

Monday, April 28th, 2025 at 10:26 (SLT)

கண்டியில் இருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த கடுகதி ரயில் முன்பாக பாய்ந்து ஒருவர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கம்பஹா – மீரிகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

மின்னல் தாக்கியதில் தந்தை, மகன் உள்ளிட்ட நால்வர் வைத்தியசாலையில் 

Monday, April 28th, 2025 at 10:19 (SLT)

அநுராதபுரம், அபய வாவியில் நீராடிக்கொண்டிருந்த 4 பேர் மின்னல் தாக்கத்திற்குள்ளாகிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வாவியில் நீராடிக்கொண்டிருந்த தந்தை, மகன் உள்ளிட்ட நால்வரே இவ்வாறு மின்னல் தாக்கத்திற்கு இலக்காகியுள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

ஒரு தொகை போதைப்பொருட்கள் இன்று அழிக்கப்படவுள்ளன

Monday, April 28th, 2025 at 10:16 (SLT)

ஒரு தொகைப் போதைப்பொருட்கள் இன்று திங்கட்கிழமை (28) அழிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்திட்சகருமான புத்திக்க மனதுங்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>