தேடப்பட்டு வந்த சந்தேகநபர் விமான நிலையத்தில் கைது

September 20th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

விசாரணைக்காக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் டுபாயில் இருந்து நாடு திரும்பிய நிலையில் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பண மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தேர்தலுக்கா‌க விசேட பாதுகாப்பு அமைதி உறுதிப்படுத்தப்படும்: பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு

September 20th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதித் தேர்தல் பாதுகாப்புக்காக நாடளாவிய ரீதியில் பொலிஸ் வீதி தடைகளை ஏற்படுத்துவதற்கும் வன்முறை சம்பவங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கும் பிரதேசங்களுக்கு மேலதிகமான பாதுகாப்பை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் பாதுகாப்புக்காக முப்படை வீரர்களையும் போதியளவில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை பொதுவெளியில் திரையிட தடை

September 20th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை பொதுவெளியில் திரையிடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை (19) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வவுனியாவுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பிவைப்பு

September 20th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நாளைஇடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வவுனியா மாவட்டத்தின் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பசில் ராஜபக்ஷ துபாய்க்கு திடீர் பயணம்

September 20th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக துபாய்க்கு இன்று வெள்ளிக்கிழமை பயணமாகியுள்ளதாக நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி உறுதிப்படுத்தினார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தேர்தல் பணிகளில் இருந்து 09 அரச அதிகாரிகள் நீக்கம்

September 20th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தேர்தல் பணிகளில் இருந்து 09 அரச அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்ட 09 அரச அதிகாரிகளே இவ்வாறு நீக்கப்பட்டதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி எம்.பி.சுமணசேகர தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சுவிஸில் இலங்கை தமிழ் இளைஞன் மர்மமான முறையில் உயிரிழப்பு: இருவர் கைது

September 20th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சுவிஸில் வசித்து வந்த இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளாட் ப்ரூக்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 34 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தெஹிவளையில் துப்பாக்சி சூடு – ஒருவர் பலி: 48 மணி நேரத்தில் ஐந்தாவது துப்பாக்கிச் சூட்டு சம்பவம்

September 20th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தெஹிவளையில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். கடவத்த வீதியில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இதில் 45 வயதுடைய ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

எமது ஆட்சியின் கீழ் இனவாதம், மதவாதம் ஆகியவற்றுக்கு இடமில்லை:அநுரகுமார திஸாநாயக்க

September 19th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தனது ஆட்சியின் கீழ் இனவாதம், மதவாதம் ஆகியவற்றுக்கு இடமில்லை என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்ட போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சஜித் வெற்றி பெற்றால் சுமந்திரனுக்கு அமைச்சு பதவி: என்.ஸ்ரீகாந்தா

September 19th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஒருவேளை தேர்தலில் வெற்றிபெற்றால் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு அவர் நிச்சயம் அமைச்சுப்பதவியை வழங்குவார் என மூத்த சட்டத்தரணியான என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

24 மணி நேரத்தில் இடம்பெற்ற நான்காவது துப்பாக்கிச் சூடு : நால்வர் பலி

September 19th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

குருநாகல், ரஸ்நாயக்கபுர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

திடீர் சுகயீனம் 500 ஆடைத் தொழிற்சாலை பணியாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

September 19th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பொலன்னறுவை – பக்கமூன பிரதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 500 பணியாளர்கள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பக்கமூன பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (19) காலை இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஐரோப்பாவை அச்சுறுத்தும் புதிய கோவிட் திரிபு: இதுவரை 27 நாடுகளில் பரவியுள்ளதாக தகவல்

September 19th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

எக்ஸ்.ஈ.சீ ( XEC) எனப்படும் புதிய கோவிட் வைரஸ் ஐரோப்பா முழுவதும் வேகமாக பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது கோவிட் நோயின் மாறுபாடு எனவும், விரைவில் பரவக்கூடியது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வவுனியாவில் கோர விபத்து : இருவர் பலி

September 19th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வவுனியா, ஓமந்தை ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, ஓமந்தை, பலநோக்கு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அருகாமையில் நேற்று(18) மாலை இவ் விபத்து இடம்பெற்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தேசிய மக்கள் சக்தியால் ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது : மஹிந்த

September 18th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தேசிய மக்கள் சக்தியால் இந்த நாட்டில் ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். செம்மறி ஆட்டுத்தோல் அணிந்து வரும் குழுக்களால் மக்கள் ஏமாற மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button