வடக்கு கிழக்கு அரசியல் பிரதிநிதிகள் சஜித்துடன் சந்திப்பு

August 14th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரதிநிதிகள் குழுவினருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று (13) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.  

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில் இரு குழுக்கள் இடையே மோதல்

August 14th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணம் – சேந்தாங்குளம் பகுதியில் இரு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று படகுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன் ஒரு படகு முற்றாக சேதமடைந்தது. சேந்தாங்குளம் கடற்கரையில் நேற்று இரவு 9 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பசில் ராஜபக்சவை இலங்கை அரசியலில் இருந்து நீக்க நடவடிக்கை?: சர்வஜன பலய தீர்மானம்

August 13th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மகிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை இலங்கை அரசியலில் இருந்து நீக்க சர்வஜன பலய கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாக கடந்த 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வெளியான “மவ்பிம“ பத்திரகை தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ரணிலின் பரந்தப்பட்ட கூட்டணி: 16ஆம் திகதி அங்குரார்ப்பணம் இணைய போவது யார்?

August 13th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பரந்தப்பட்ட கூட்டணியொன்றை அமைத்து வருகிறார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில். மூதாட்டி சடலமாக மீட்பு : அயல் வீட்டு இளைஞன் கைது

August 12th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணத்தில் தனிமையில் இருந்த மூதாட்டி ஒருவர், சந்தேகத்திற்கு இடமான முறையில், உயிரிழந்துள்ள நிலையில் , அயல் வீட்டு இளைஞன் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மீசாலை வடக்கை சேர்ந்த நடேசப்பிள்ளை சரஸ்வதியம்பாள் (வயது 80) என்பவரே உயிரிழந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அவசர எச்சரிக்கை

August 12th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் எனக்கூறி சிலர், வர்த்தகர்களிடம் சென்று பணம் வசூலிப்பதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள துப்பாக்கி சூடு

August 12th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பிரித்தானியாவின் சர்ரே(Surrey) கிராமத்தில் தீவிர வாக்குவாதம் தொடர்பான தகவல்களுக்கு பிறகு, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞர் ஒருவரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

டிஜிட்டல் முறைமையிலான சுயநிர்ணயத்தை தமிழர்களுக்கு வழங்கலாம் : பாட்டலி சம்பிக்க ரணவக்க

August 12th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பொருளாதார ரீதியில் நாடு தற்போது அடைந்துள்ள ஒப்பீட்டளவிலான முன்னேற்றத்தை சீர்குலைக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தலின் போது செயற்படமாட்டோம். அரச கட்டமைப்பு டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டால் தமிழர்களுக்கு டிஜிட்டல் முறைமை ஊடாக சுயநிர்ணயத்தை வழங்கலாம் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதி போட்டியில் இருந்து ஜனாதிபதி விலகிக்கொள்ள வேண்டும் : ஜனாதிபதி வேட்பாளர் விஜேதாச ராஜபக்ஷ

August 12th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதியின் ஆலாேசகர் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவது சட்ட விராேதமாகும். அது தொடர்பில் ஜனாதிபதி வெட்கப்பட வேண்டும். சரியாக இருந்தால் அவர் ஜனாதிபதி போட்டியில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என தேசிய ஜனநாயக முன்னணி ஜனாதிபதி வேட்பாளர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பியுள்ள தவறான கடிதம்: பிரதமர் ஊடகப் பிரிவு விளக்கம்

August 12th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பிரதமருக்கு ஆசி வழங்கும் அன்னதான நிகழ்வு குறித்து தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு என்ற தலைப்பில் 2024.08.09 அன்றும் அதற்கு கிட்டிய நாட்களிலும் ஊடகங்களில் வெளியிடப்பட்ட மற்றும் பரப்பப்பட்ட செய்தியுடன் தொடர்புடையது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சம்பள பிரச்சினையும் ஜனாதிபதியின் வாக்குறுதியும்: தீர்வுக்காக காத்திருக்கும் தோட்ட தொழிலாளர்கள்

August 12th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் சம்பள நிர்ணயச் சபையுடன் இன்று திங்கட்கிழமை கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வேட்பாளர்களின் எண்ணிக்கை 30 ஐ அண்மித்தது: நிதி வழங்க தயார் என்கிறார் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

August 12th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதித் தேர்தலில் அதிகளவான வேட்பாளர்கள் போட்டியிடுவது பிரச்சினையல்ல எனவும் அதற்காக நிதி ஒதுக்குவதற்கும் நிதியமைச்சு தயாராக உள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மரண வீடொன்றில் ஏற்பட்ட மோதல் வீதியில் கிடந்த முதியவரின் சடலம்

August 11th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பிபில – மஹியங்கனை பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (11) காலை சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ரிதிமாலியத்த பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்ட நபர் ஊரணிய 12ஆம் கட்டையை சேர்ந்த 60 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ரணிலின் வெற்றிக்காக நாடு முழுவதும் 150 அரசியல் கூட்டங்கள் ஏற்பாடு

August 11th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் அரசியல் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய, ஏறக்குறைய 150 அரசியல் கூட்டங்களை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நிலநடுக்க எச்சரிக்கை பொருள்களை வாங்கிக் குவிக்கும் ஜப்பான் மக்கள்

August 11th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜப்பானில் பெரிய அளவிலான நிலநடுக்கம் வரலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. இதனால், பொதுமக்கள் பேரழிவு ஏற்பட்டால் தேவைப்படக்கூடிய பொருள்களையும் அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியப் பொருள்களையும் வாங்கிக் குவிப்பதில் இறங்கியுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button