இலங்கையின் பாதாள உலகக் குழுத் தலைவர் ஓமானில் கைது

September 7th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையைச் சேர்ந்த பாதாள உலகக் குழுத் தலைவரான ‘மிதிகம சூட்டி’ என அழைக்கப்படும் பிரபாத் மதுஷங்க ஓமானில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தென்னிலங்கையில் செயற்படுகின்ற பாதாள உலகக் குழுவின் தலைவர் எனவும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் உறுப்பினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஆட்டை திருடி ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சென்ற திருடன் : ஆட்டோவை விட்டு விட்டு ஆட்டுடன் தப்பி ஓட்டம் – மட்டக்களப்பில் சம்பவம்

September 7th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வீதியோரத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை திருடி, வாடகைக்கு வாங்கியிருந்த ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு சென்ற திருடன், ஆட்டோவை நடுவீதியில் விட்டுவிட்டு, ஆட்டுடன் தப்பி ஓடிய சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன் முறையாக ஒரே நேரத்தில் நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் நியமனம்

September 7th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை பொலிஸ் வரலாற்றில் முதன் முறையாக, நான்கு பெண் பிரதி பொலிஸ்மா அதிபர்கள் ஒரே நேரத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன், பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்தப் பதவி உயர்வுகளுக்கு அனுமதியளித்துள்ளார்

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அரிய வகை பூரண சந்திர கிரகணம் இன்று

September 7th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இன்றைய (7) தினம் வானில் அரிய வகை முழு சந்திரகிரகணம் தென்படவுள்ளது. இரத்த நிலவு என்று அழைக்கப்படும் இது, இந்த ஆண்டின் கடைசி முழு சந்திர கிரகணமாகும்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மேய்ச்சல் நிலத்தை பெற்றுத்தர துரித நடவடிக்கை வேண்டும்

September 7th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தங்களின் போராட்டம் இரண்டு வருடங்கள் கடக்கவுள்ள போதிலும் தமக்கான தீர்வுகள் இதுவரை கிடைக்கவில்லை என மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் நில பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பண்ணையாளர்கள் நேற்று (6) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

எல்ல விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தங்காலை நகர சபைக்கு

September 6th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்த தங்காலை நகர சபை ஊழியர்களின் உடல்கள் தங்காலை நகர சபைக்கு கொண்டுவரப்பட்டு, இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அங்கு வைக்கப்பட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நீர்க்கொழும்பில் துப்பாக்கிச் சூடு

September 6th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இன்று (06) அதிகாலை 1:38 மணியளவில், நீர்கொழும்பு குட்டுதுவ பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.எனினும், இந்தத் துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வவுனியாவில் சப்பறத் திருவிழாவுக்கு பட்டாசுடன் வந்த வாகனம் தீயில் எரிந்து நாசம்

September 6th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வவுனியாவில் சப்பறத் திருவிழாவுக்கு பட்டாசுடன் வந்த வாகனம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.வவுனியா, வெளிக்குளம் பிள்ளையார் ஆலயத்தின் சப்பறத் திருவிழா வெள்ளிக்கிழமை (05) இரவு இடம்பெற இருந்த நிலையில், சப்பற திருவிழாவின் போது வெடி கொளுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட பட்டாசுகளை இறக்கிக் கொண்டிருந்த பட்டா ரக வாகனம் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கிராண்ட்பாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

September 6th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கிராண்ட்பாஸ் மாவத்த பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

AddThis Social Bookmark Button

செம்மணியில் சுண்டுக்குளி மாணவி கிருசாந்தி குமாரசுவாமி நினைவேந்தல்

September 6th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

1996 ஆம் ஆண்டு சந்திரிகா அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில், சிறீலங்கா இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு வல்லுறவுக்கும் பின்னர் படுகொலைக்கும் உட்படுத்தப்பட்ட சுண்டுக்குளி மகளீர் உயர்தரப் பாடசாலை மாணவி கிருசாந்தி குமாரசுவாமி அவர்களின் 29ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வரும் 07.09.2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு செம்மணி வளைவில் நடைபெற உள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிரிட்டனின் கென்ட் டச்சஸ் லேடி கேத்தரின் காலமானார்

September 6th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கென்ட் டச்சஸ் லேடி கேத்தரின் காலமானார். அவர் இறக்கும் போது அவருக்கு 92 வயது என்று பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது. மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் முதல் உறவினரான இளவரசர் எட்வர்டை மணந்த கென்ட் டச்சஸ், அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினரும் ஆவார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மோடி-டிரம்ப் உறவு முடிந்துவிட்டது

September 5th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கும், இந்திய பிரதமர் மோடிக்கும் இடையே ஒரு காலத்தில் தனிப்பட்ட முறையில் நல்ல உறவு இருந்தது. அது இப்போது முடிந்துவிட்டதாக அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டன் இங்கிலாந்து செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கை – இத்தாலி இடையே அரசியல் கூட்டம்

September 5th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை – இத்தாலி இடையிலான முதலாவது அரசியல் ஆலோசனைக் கூட்டம் நேற்று (04) கொழும்பில் நடைபெற்றது. இந்தக் கூட்டம் இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா திரிபோடி மற்றும் இலங்கை வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தலைமையில் நடைபெற்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

எல்ல பேருந்து விபத்து : ஜீப் சாரதி கைது

September 5th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

எல்ல – வெல்லவாய பகுதியில் நேற்று (04) இடம்பெற்ற வாகன விபத்தில் தொடர்புடைய ஜீப் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்தில் இருந்தவர்களில் பதினைந்து பேர் (6 ஆண்கள் மற்றும் 9 பெண்கள்) இறந்ததாகவும், குழந்தைகள் உட்பட 18 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பென்டகனின் பெயரை மாற்ற முடிவு ட்ரம்ப்

September 5th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பென்டகனின் பெயரை போர் திணைக்களம் என மாற்ற முடிவு செய்துள்ளார். அந்நாட்டின் பாதுகாப்பு செயலாளர் பதவியை போர் செயலாளராக மாற்றும் நிறைவேற்று ஆணையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்

AddThis Social Bookmark Button