January 27th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »
January 27th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »
தயாரிக்கப்படும் உணவுகளில் சேர்க்கக் கூடிய சீனியின் அளவு தொடர்பில் தீர்மானிக்கும் ஒரு கொள்கையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்களில் சுமார் நூற்றுக்கு 20 வீதமானவர்கள் நீரழிவு நோயால் Read the rest of this entry »
January 27th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனை மீண்டும் 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எதிர்வரும் 10ம் திகதி வரை (10.2.2016) விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு Read the rest of this entry »
January 27th, 2016 latha Posted in TELOnews, இணையத்தள செய்தி No Comments »
யாழ்ப்பாணம் புத்தூர் மேற்கு நவக்கிரி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிலத்தில்ஏற்பட்ட வெடிப்பு தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழ் உள்ள தேசிய கட்டங்கள் ஆராய்ச்சி அமைப்பினர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த குழுவினர் இன்று புதன்கிழமை காலை சம்பவ இடத்திற்கு விஜயம் மேற்கொண்டு Read the rest of this entry »
January 23rd, 2016 Thulasi Posted in TELOnews No Comments »
ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிபார்ப்பாக உள்ள காணமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகள் தொடர்பிலான தீர்வில் மாறிமாறி வரும் அரசுகள் காட்டிவரும் மெத்தனப்போக்கின் உச்ச கட்டமாக அண்மையில் பிரதமரின் கூற்றுக்கள் அமைந்துள்ளமை வேதனையையும் ஏமாற்றத்தையும் அளிக்கின்றது .பல வாக்குறுதிகளுடனும் தமிழ் மக்களின் நம்பிக்கையுடனும் ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கம் காணமல் போனோர் மற்றும் அரசியல் கைதிகள் தொரர்பில் சாதகமான தீர்வினை வழங்குவார்கள் என நம்ம்பியிருந்த மக்களுக்கு தீர்வை வழங்குவதை விடுத்து அவ்வாறான பிரச்சனைகளே இல்லை என காட்டும் முயற்சியில் இறங்கியுள்ளமையையே பிரதமரின் செயற்பாடுகள் வெளிப்படுகின்றது . Read the rest of this entry »
December 25th, 2015 Thulasi Posted in TELOnews No Comments »
ஊடகவியலாளர் மீதான தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று சிறீரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் பா.உதயராசா தொரிவித்தார்.நேற்று (24.12.2015) பகல் வவுனியா நகர் பகுதியில் ஊடகவியலாளர் மீது நடாத்தப்பட்ட தாக்கதலுக்கு கண்டனம் தெரிவித்து ஊடகங்களுக்க அளித்த செவ்வியில் இவ்வாறு தெரிவித்தார்.
இச் செவ்வியின் விபரம் வருமாறு, Read the rest of this entry »
November 10th, 2015 Thulasi Posted in TELOnews No Comments »
எமது வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
இந்த இனிய திருநாளில், நாடெங்கும் அன்பும் அமைதியும் தழைக்கட்டும், வேற்றுமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும், அனை வரது வாழ்விலும் வளமும் நலமும் பெருகட்டும் என்று இறைவனை வேண்டி, ரெலோ நீயூஸ் வாசகர்கள் அனைவருக்கும் எமது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.www.telonews.com
October 16th, 2015 Thulasi Posted in TELOnews No Comments »
June 30th, 2015 Thulasi Posted in TELOnews No Comments »
சர்வதேச போதைப்பொருள் தினத்தை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை அலரிமாளிகையில் நடந்த நிகழ்வொன்றில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க “விடுதலைப்புலிகள் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும்” . “விடுதலைப்புலிகளை விடவும் போதைப்பொருள் ஆபத்தானது” எனவும் .கூறியதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்துள்ளன.விடுதலைப்புலிகளை நேருக்கு நேர் போர்க்களத்தில் சந்திக்க வலுவில்லாமல் இருந்த முன்னைய ரணில் அரசாங்கம் பேச்சு வார்த்தை என்ற மாய வலையினை விரித்து வழமையான தனது நரித்தந்திரத்தினால் விடுதலைப்புலிகளை பலமிழக்க செய்ய முனைந்ததுடன் தமிழ் மக்களின் நண்பன்போல் தன்னைக்காட்டிக்கொண்டு தமிழ் மக்களுக்காக போராடிய போராளிகளை கேவலப்படுத்தி பேசிவருகின்றமையினை மகள் புரிந்துகொள்ளவேண்டும் . Read the rest of this entry »
May 25th, 2015 Thulasi Posted in TELOnews No Comments »
யாழ் நீதிமன்ற தாக்குதல் விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் மாத்திரம் தண்டிக்கப்பட வேண்டுமென கோருவதுடன் . ஏனையவர்கள் மீது வீண் பழிசுமத்தும் வக்கிர அரசியலை கூட்டமைப்பினர் கைவிட வேண்டும்.யாழ் புங்குடிதீவில் இடம்பெற்ற சி. வித்தியாவின் மீதான காமக் கொடுரர்களின். வன்புணர்வுக் கொலையினை கண்டித்து கட்சி பேதமின்றி ஒட்டுமொத்த தமிழினமும் உணர்சிமேலீட்டால் வீதிக்கு இறங்கி போராடிய போது யாழ்பாணத்தில் இடம்பெற்ற ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர் வரம்பு மீறி யாழ் நீதிமன்றக்கட்டிடம் மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியதன் விளைவாக 130 பேர் கைது செய்யப்பட்டு அனுராதபுர சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர் இதில் உண்மையாகவே வன்முறையில் ஈடுபடாத அப்பாவிகளும் உள்ளடங்கியுள்ளமை வேதனைக்குரியது . Read the rest of this entry »
May 18th, 2015 Thulasi Posted in TELOnews, ஊடக அறிக்கை No Comments »
இலங்கை சுதந்திரம் அடைந்த நாள் முதல் எமது தமிழினம் காலத்துக்கு காலம் பல துன்பங்களை சந்தித்து வந்தாலும் தமிழனால் “தமிழன்” என்று ஒரு இனம் இருக்கும் வரையில் மறக்க முடியாத நாட்களாக யூலைக்கலவரமும் முள்ளிவாய்க்கால் படுகொலையையும் அமைந்துள்ளது கருவில்இருந்த குழந்தைமுதல் முதியவர் வரையும் எந்தப்பாகுபாடும் இன்றி கொத்துக்கொத்தாக மண்ணில் மடிந்த அவலத்தினை இன்று நினைத்தாலும் இதயங்கள் கனக்கின்றன. Read the rest of this entry »
April 13th, 2015 Thulasi Posted in TELOnews No Comments »
மலரப்போகும் இனிய மன்மத வருட சித்திரைப்புத்தாண்டு தமிழர்கள் வாழ்வில் வரலாற்று வாழ்வுரிமைக்கான முத்திரையினை பதிக்க வேண்டி மகிழ்ச்சியுடன் வரவேற்போம் என சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, Read the rest of this entry »
March 27th, 2015 Thulasi Posted in TELOnews No Comments »
வன்னி மாவட்டம் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசமாகும். இந்நிலையில் மீள் குடியேற்றம் என்ற போர்வையில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் சுவீகரிக்கப்பட்டு முஸ்லிம் மக்களுக்கு வழங்குவது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத ஒன்றாகும். இந்நிலையில் தமிழ் மக்களின் இன ஒற்றுமை பற்றி அமைச்சர் றிசாட் பதியுதீன் பேசுவது நகைப்பிற்குரியதாகும் என்பதுடன் இத்தகைய கருத்தினை வெளியிடுவதற்கு தான் தகுதியானவரா என தனது மனச்சாட்சியிடம் கேட்டுக்கொள்ளவேண்டும் என தமிழர் மேம்பாட்டு பேரவை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read the rest of this entry »
March 19th, 2015 Thulasi Posted in TELOnews No Comments »
சிகிரியா குகையின் பளிங்கு சுவரில் தனது பெயரை பதிவு செய்ததற்காக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சின்னத்தம்பி உதயசிறி எனும் இளம் பெண்ணிற்கு மனிதாபிமான ரீதியில் சனாதிபதி அவர்கள் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என சிறீரெலோ கட்சி கோரிக்கைவிடுத்துள்ளது. வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்குண்டு வெளிவருவதற்காகவே வாழ்க்கைப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சின்னத்தம்பி உதயசிறி எனும் இளம்பெண்ணிற்கு தற்போது உயர்ந்தபட்ச சிறைவாசத்தை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதையிட்டு சிறிரெலோ கட்சியினராகிய நாம் எமது மனவருத்தத்தை தெரிவித்துக்கொள்கின்றோம். Read the rest of this entry »
February 14th, 2015 Thulasi Posted in TELOnews No Comments »
தமிழ் நாட்டில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை இங்கு அனுப்புவது பற்றி செய்திகள் அடிக்கடி பார்க்க முடிகிறது. 2005 ல் இடம்பெயர்ந்து இடைத் தங்கு முகாமில் உள்ள 5000 திற்கு மேற்பட்ட சம்பூர் மக்களை மீண்டும் அவர்களின் இடங்களுக்கு திருப்பி அனுப்புவது பற்றி ஆக்க பூர்வமான அக்கறையை முதலில் எல்லா தரப்பினரும் காட்டுவது தான் சிறப்பானது. இதில் தமிழ் அரசுக் கட்சித் தலைவர்கள் வடக்குக்கு ஒரு நிலை பாடு கிழக்குக்கு ஒரு நிலைபாடு என பாரபட்சம் காட்டக் கூடாது. கிழக்கு மாகாண தமிழ் பாராளுமன்ற, மாகாண சபை உறுப்பினர்கள் விரைந்து செயல் ஆற்ற வேண்டும் இவ்விடயத்தில். ஜனாதிபதியின் 100 நாட்கள் திட்டத்தில் இதை விரைவாக ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும். Read the rest of this entry »