சிறீ ரெலோ செயலாளர் நாயகம் ப.உதயராசாவின் பொங்கல் வாழ்த்து

January 15th, 2015 Thulasi Posted in TELOnews No Comments »

உலகத் தமிழ் மக்கள் அனைவரும் உழவர் திருநாளாகப் போற்றிக் கொண்டாடும் தமிழ்ப் புத்தாண்டு தினமாகிய தைப்பொங்கல் நன்னாளில் எனது மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன் என சிறி ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் தமிழ் உழை ப்பாளியின் தினம். தமிழ் மக்களின் பிரதான தொழிலான வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள் தங்கள் வேளாண்மை சிறப்பதற்கு உதவிய இயற்கைக்கும், உற்பத்தி முறைமையில் பிரதான கருவிகளாக இருந்து வந்த காளை மாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கும் திருநாள். சாதி, மத பேதங்கள் கடந்து ஒட்டுமொத்தத் தமிழர்களும் கொண்டாடும் பண்பாட்டுப் பெருவிழா. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தலைமைச்செயலகம் விடுத்துள்ள பொங்கல் வாழ்த்து

January 15th, 2015 Thulasi Posted in TELOnews No Comments »

இன்று பிறந்திருக்கின்ற தைப்பொங்கல் திருநாள்; தமிழர் இல்லங்களில் மனநிறைவுடன் பால் பொங்குவது போன்று அவர்களுடைய வாழ்வியல் பிரச்சனைகளும்; இனிதே வெற்றியடைய வேண்டும் என இத் தைத்திருநாளில் வாழ்த்துவதாக சிறீரெலோ கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரன் தனது வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

கூட்டமைப்பின் தலைவர்கள் காழ்ப்புணர்ச்சிகளை துறந்து மக்களுக்கு பணியாற்ற முன்வர வேண்டும்! உதயராசா கோரிக்கை

January 11th, 2015 Thulasi Posted in TELOnews No Comments »

நடந்து முடிந்த சனாதிபதி தேர்தலில் வெற்றி வாகை சூடிய மைத்திரிபால சிறிசேன இலங்கையின் புதிய சனாதிபதி என்ற வகையில் எமது இதயம்கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். என சிறி ரெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சனாதிபதி தேர்தல் முடிவுற்ற நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு சில தலைவர்களால் ஊடகங்களில் வெளியிடப்பட்டு வரும் அறிக்கைகள் தமிழ் மக்களின் ஒற்றுமைக்கு சவால் விடுவனவாக அமைவது கவலை அளிக்கிறது என்பதுடன் பழிவாங்கும் எண்ணத்தையும் வெளிக்காட்டி நிற்கிறது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

புதிய ஜனாதிபதியாக மைத்திரி

January 9th, 2015 Thulasi Posted in TELOnews No Comments »

இலங்கையில் நேற்று வியாழக்கிழமை – 8-ம் திகதி நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 51.28 சதவீத வாக்குகளை வென்று வெற்றிபெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேஷப்பிரிய அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இலங்கையின் 7வது ஜனாதிபதித் தேர்தலில் 62 லட்சத்து 17 ஆயிரத்து 162 வாக்குகளைப் பெற்று மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றுள்ளார்.

இதன்படி, செல்லுபடியான வாக்குகளில் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்தார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இன்றைய ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள ரெலோ நீயூஸ் உடன் இணைந்திருங்கள்

January 8th, 2015 Thulasi Posted in TELOnews No Comments »

இன்றைய ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள ரெலோ நீயூஸ் உடன் இணைந்திருங்கள். தேர்தல் முடிவுகளை அறிய இங்கே அழுத்தவும்
AddThis Social Bookmark Button

ஆளுக்கொரு நீதியை வலியுறுத்தும் சம்மந்தன் குழுவினருக்கு எதிராக தமிழர்கள் சாட்டையை சுழற்ற வேண்டும். ப.உதயராசா

January 5th, 2015 Thulasi Posted in TELOnews No Comments »

சனாதிபதி தேர்தலில் சொந்த சலுகைகளுக்காக சோரம் போன சம்மந்தன் குழுவினருக்கு எதிராக தமிழ் மக்கள் வாக்கு உரிமையை பயன்படுத்தி நல்ல சாட்டை அடியினை கொடுக்க முன்வரவேண்டும் என சிறிரெலோகட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா தெரிவித்தார். செட்டிகுளத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர் மகிந்த ராஜபக்ஸவினை ஆதரித்து நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் எதிரணி வேட்பாளர்களை ஆதரிக்கும் பரிவாரத்தில் தேரை செலுத்துபவர்கள் அனைவரும்  முன்னர் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து சொத்து சேர்த்தவர்களும் தவறான வழியில் வாணிபம் செய்தவர்களுமே அதிகம்.ஆகவே தமிழ் மக்களாகிய நீங்கள் ஒன்றை தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சம்மந்தன் குழுவினரின் சதி வலைக்குள் சிக்காது தமிழ் மக்கள் சனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்சவினையே ஆதரிக்க வேண்டும்: ப.உதயராசா

December 30th, 2014 Thulasi Posted in TELOnews No Comments »

சம்மந்தன் குழுவினரின் சதி வலைக்குள் சிக்காது தமிழ் மக்கள் சனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்சவினையே ஆதரிக்க வேண்டும். ப.உதயராசா. நடைபெறவுள்ள சனாதிபதி தேர்தலில் சிறிரெலோகட்சி சனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினையே ஆதரிக்கும் என சிறிரெலோ கட்சியின் செயலாளர் ப.உதயராசா விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. வடக்கிலே யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து அபிவிருத்தி பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அபிவிருத்தி பணிகளை விரைவுபடுத்த வேண்டிய தேவைப்பாடு வடக்கிலே வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு இருக்கிறது. இதனை ஏற்கனவே திட்டமிட்டு செயற்படுத்தி வரும் ஒருவரிடமே நாம் நாட்டை ஒப்படைக்க முடியும். எம்மைப்பொறுத்தவரை எவ்விதமான தமிழ் மக்களின் அரசியல் தீர்வாக இருந்தாலும் பாராளுமன்ற அங்கீகாரத்துடனே சாத்தியமாகும் என்பதில் அளப்பரிய நம்பிக்கையுண்டு. அந்த தீர்வினை அங்கீகரிக்க வேண்டுமாக இருந்தால் பெரும்பான்மையான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அவ்வாறு இல்லை. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் முக்கிய செய்தி.!

July 15th, 2014 Thulasi Posted in TELOnews No Comments »

புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து அமைப்பினரால் புங்குடுதீவில் இயங்கிக் கொண்டிருக்கும் சர்வோதய அமைப்பினர் கேட்டதற்கிணங்க, தண்ணீரத்; தாங்கி வாகனம் (பௌசர்) ஒன்று வாங்கிக் கொடுக்கும் நிகழ்வு இம்மாதம் (30.07.2014) நடைபெறவுள்ளது. இந்நிகழ்விற்கு எமதூரில் உள்ள சமூக ஆர்வலர்கள், கல்விமான்கள், ஏனைய சமூகப் பணியாற்றும் அமைப்பினர், பொதுமக்கள் அனைவரையும் பங்குபற்றிச் சிறப்பிக்குமாறு பணிவுடன் அழைக்கின்றோம். Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜெர்மனியில் ரேலோ உறுப்பினர்கள் கலந்து கொண்ட அஞ்சலி நிகழ்வு

July 13th, 2014 Thulasi Posted in TELOnews No Comments »

இலங்கை அரசினால் தமிழ் மக்கள் மீது திட்டமிட்டு நடாத்தப்பட்ட இனப்படுகொலையின் கறுப்பு யூலை நினைவு தினத்தையொட்டி, தமிழீழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) தலைவர் தங்கத்தரை, தளபதி குட்டிமணி, ஜெகன், நடேசுதாசன், தேவன், சிறீகுமார், சிவபாதம் உட்பட, இலங்கை அரசின் சிறையில் கொல்லப்பட்ட அனைத்து போராளிகளுக்கும் இனக்கலவரத்தின் போது கொல்லப்பட்ட மக்களுக்குமான அஞ்சலி நிகழ்வு ஜெர்மனில் 12-07-2014 அன்று நடைபெற்றது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

வவுனியா புதிய கற்பகபுர காணிப் பிரச்னை சம்பந்தமாக ஸ்ரீ ரெலோ கட்சி விடுத்துள்ள பொதுமக்கள் விழிப்புணர்வு அறிக்கை!!

May 26th, 2014 Thulasi Posted in TELOnews No Comments »

வவுனியா புதிய கற்பகபுரம் காணிப்பிரச்சினை குறித்து ஸ்ரீ ரெலோ கட்சி விடுத்துள்ள பொதுமக்கள் விழிப்புணர்வு அறிக்கை வருமாறு. வவுனியாவில் வாழ்கின்ற பாதிக்கப்பட்ட காணிகள் அற்றவர்களுக்கு புதிய காணிகளை வழங்குவதற்காக ஸ்ரீ ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப. உதயராசா அவர்களின் அயராத முயற்சியின் பயனாக பசில் ராஜபக்ஸ அவர்களினூடாக அனுமதியினை பெற்று 2009, 2010 காலப்பகுதியில் “புதிய கற்பகபுரம்” எனும் கிராமத்தை உருவாக்கி நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு புதிய காணிகள் வழங்கப்பட்டது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம் அவர்களின் தாயார் மறைவு

October 21st, 2012 admin Posted in TELOnews No Comments »

அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம் அவர்களின் தாயாரும், இலங்கையில் ஊரங்குணை, கட்டுவன், தெல்லிப்பழை என்ற முகவரியைச் சேர்ந்தவருமான திருமதி. சிவகாமி விசுவலிங்கம் அவர்கள் 19-10-2012 இல் இலண்டனில் காலமானார்.

அன்னார்

-காலம் சென்ற விசுவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்
-சிவலிங்கம் ( பிரித்தானியா) Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தலைவர் சிறி சபாரத்தினம் நினைவு தினம்- சிறி டெலோ ஏற்பாட்டில்

May 5th, 2012 Thulasi Posted in TELOnews No Comments »

தமிழ் மக்களின் ஒப்பற்ற தலைவர் அமரர் சிறி சபாரத்தினம் மற்றும் அவரோடு உயிர் நீத்த 300 போராளிகளினதும் நினைவு தினம் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மே மாதம் 5ம் திகதி அனுஷ்டிக்கப் படுகிறது. தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை சரியான வழியிலே முறையாக முன்னெடுத்தவர் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மறைந்த தலைவர் சிறி சபாரத்தினம். மக்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி, பாரிய தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர்கள் டெலோ அமைப்பினர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சிறி சபாரத்தினம் நினைவுக் கிண்ண உதை பந்தாட்டப் போட்டி

May 5th, 2012 Thulasi Posted in TELOnews No Comments »

மாபெரும் உதை பந்தாட்டப் போட்டி ஒன்று சிறி டெலோ அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா நகர சபை மைதானத்தில் வன்னிப் பிரதேச விளையாட்டுக் கழகங்களுக்கிடையில் நடைபெறுகிறது. கடைசி நாள் போட்டிகள் மறைந்த எமது அமைப்பின் தலைவர் சிறி சபாரத்தினம் உட்பட அனைத்துப் போரளிகளையும் நினைவு கூரும் வண்ணம் மே 6ம் திகதி நடை பெறவுள்ளன.  சிறி டெலோ அமைப்பின் ஏற்பாட்டில் நிகழ்சிகள் ஒழுங்கு செய்ய்யப் பட்டிருக்கின்றன. பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த கழகங்கள் இதில் பங்கு பெறுவதும், ஒரு தமிழ் அரசியல் அமைப்பினால் நடாத்தப் படுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

AddThis Social Bookmark Button

மாபெரும் மே தின ஊர்வலம்- சிறி டெலோ நாடளாவிய சாதனை

May 5th, 2012 Thulasi Posted in TELOnews No Comments »

கடந்த மே தினத்தில், சிறி டெலோ கட்சி தொழிலாளர்களின் ஊர்வலம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதன் பின்னர் திரு. உதயராசா தலைமையில் தொழிலாளர்களை கௌரவிக்கும் முகமாக கூட்டம் ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஊர்வலம் பகல் சுமார் 3.00 மணியளவில் ஆரம்பமாகியது. மக்கள் கூட்டம் கூட்டமாக அணிதிரண்டனர். அலைபோல் மக்கள் வெள்ளம் சாரிசாரியாக வீதி நெடுகிலும், கொழுத்தும் வெய்யிலையும் பொருட்படுத்தாது ஊர்வலமாக வந்த வண்ணம் இருந்தனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

வவுனியாவில் சிறி ரெலோவின் மாபெரும் மே தின கூட்டம் (படங்கள் இணைப்பு)

May 1st, 2012 editor Posted in TELOnews No Comments »

சிறி ரெலோவின் மாபெரும் மே தினக் கொண்டாட்டம் இன்று பிற்பகல் 3 மணியளவில் வவுனியாவில் இடம்பெற்றது. இச்நிகழ்வு வவுனியா குருமன்காடு கலைமகள் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் சிறி ரெலோ கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொது மக்கள் என பெருந் திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button