உலகத் தமிழ் மக்கள் அனைவரும் உழவர் திருநாளாகப் போற்றிக் கொண்டாடும் தமிழ்ப் புத்தாண்டு தினமாகிய தைப்பொங்கல் நன்னாளில் எனது மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன் என சிறி ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் தமிழ் உழை ப்பாளியின் தினம். தமிழ் மக்களின் பிரதான தொழிலான வேளாண்மையில் ஈடுபடும் விவசாயிகள் தங்கள் வேளாண்மை சிறப்பதற்கு உதவிய இயற்கைக்கும், உற்பத்தி முறைமையில் பிரதான கருவிகளாக இருந்து வந்த காளை மாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கும் திருநாள். சாதி, மத பேதங்கள் கடந்து ஒட்டுமொத்தத் தமிழர்களும் கொண்டாடும் பண்பாட்டுப் பெருவிழா. Read the rest of this entry »














