கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் திருமலையில் வாக்களிப்பு

January 26th, 2010 admin Posted in TELOnews No Comments »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றத் தலைவரும் திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் தலைவருமான இராயவரோதயம் சம்பந்தன் திருகோணமலையில் இன்று வாக்களித்துள்ளார். இலங்கையில் ஆட்சி மாற்றமொன்றுக்காக ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களைக்களை கேட்டுக் கொண்ட முதுபெரும் தமிழ்த் தலைவர் சம்பந்தர் தனது வாக்குச் சீட்டை யாருக்கு அளித்திருப்பாரென தெரிய வில்லை.

AddThis Social Bookmark Button

ஸ்ரீ. சு. கட்சியின் யாழ் அமைப்பாளர் இல்லத்துக்கு பெற்றோல் குண்டு வீச்சு

January 26th, 2010 admin Posted in TELOnews No Comments »

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண அமைப்பாளர் சுப்ரமணியம் சர்மா இல்லத்துக்கு பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அவை சுப்ரமணியம் சர்மாவின் வீட்டு முற்றத்தில் வீழ்ந்து வெடித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

AddThis Social Bookmark Button

மஹிந்த குடும்பத்துடன் வாக்களிப்பு; சரத் இன்னும் வாக்களிக்கவில்லை.

January 26th, 2010 admin Posted in TELOnews No Comments »

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை 7:30 மணிக்கு தென் மாகாண மெதமுலன ஏ. ராஜபக்ஷ மத்திய மகா வித்தியாலயத்தில் தனது பாரியாருடன் சென்று வாக்களித்தார். ஜனாதிபதியின் புதல்வர்களும் தமது பெற்றோருடன் ஒன்றாகச் சென்று வாக்களித்தனர்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா இன்னும் வாக்களிக்க வில்லையென தெரிய வருகிறது. ஜெனரல் சரத் பொன்சேகா 2005ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலிலும் வாக்களிக்க வில்லையென அவருக்கு நெருக்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

AddThis Social Bookmark Button

வவுனியாவில் இரு இடங்களில் கிரனெட் வெடித்துள்ளதாக அறிவிப்பு

January 26th, 2010 admin Posted in TELOnews No Comments »

வவுனியாவில் இரு இடங்களில் கிரனெட் வீசப்பட்டதாக டெய்லிமிரர் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரால் இந்தக் கிரினெட்டுகள் வீசப்பட்டதாகவும் இந்தச் சம்பவங்களால் எவரும் காயமடையவோ குறிப்பிடத்தக்க பாதிப்போ ஏற்படவில்லையென வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவங்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக வவுனியா பொலிசார் அறிவித்துள்ளனர்.

AddThis Social Bookmark Button

நாடு தழுவி இன்று காலை முதல் மக்கள் உற்சாகமாக வாக்குப் பதிவு; வன்முறைச்சம்பவங்கள் சில யாழில் நிகழ்ந்துள்ளதாக தெரிவிப்பு

January 26th, 2010 admin Posted in TELOnews No Comments »

இலங்கையின் நிறைவேற்று அதிகாரங்கொண்ட எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஆறாவது ஜனாதிபதி தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு முதல் மக்கள் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர்.

இதற்கு முன்னர் நடைபெற்ற எந்தத் தேர்தலையும் விட மக்கள் காலை முதல் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வழமை போன்று காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்கெடுப்பு நடைபெறும். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மன்னாரில் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

January 26th, 2010 admin Posted in TELOnews No Comments »

மன்னார் மாவட்டத்தில் மீளக்குடியேறியவர்கள் வாக்களிப்பதற்கான வசதிகள் உள்ளடக்கிய விதத்தில் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந் திருப்பதாக தெரியவருகின்றது.

மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய தொகுதிகளை உள்ளடக்கிய வன்னி தேர்தல் மாவட்டத்தில் மன்னார் பகுதியில் இன்று இடம்பெறும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிலையங்கள், வாக்குச்சாவடிகள், போக்குவரத்து நடவடிக்கைகள், பாதுகாப்பு, தேர்தல் கண்காணிப்புக்கள், மற்றும் வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் உள்ளடக்கியதான பல்வேறு முன்னேற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிவிப்பதற்கு ஏற்பாடு

January 25th, 2010 admin Posted in TELOnews No Comments »

தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் வெளியிட வேண்டும் என வலியுறுத்தியமை அடுத்து தேர்தல் ஆணையகத்தில் இருந்து ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் ஊடங்களுக்கு அறிவிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

தேர்தல்களைக் கண்காணிக்கவென அரசின் அனுமதிபெற்ற கபே மற்றும் பவ்ரல் ஆகிய அமைப்புகளின் பிரதிநிகள் நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதரகம்

January 24th, 2010 admin Posted in TELOnews No Comments »

யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத் தூதரகத்தை அமைப்பதற்கான கொழும்பின் பதிலை டெல்கி எதிர்பார்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மே மாதம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு முடிவுக்கு வந்த ஈழப்போர்-IVயை அடுத்து இந்தியா யாழ்ப்பாணத்தில் ஒரு துணைத் தூதரகத்தை அமைப்பது குறித்து தனது ஆர்வத்தை இலங்கை அரசுக்கு தெரிவித்திருந்தது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

யாழ். வலம்புரி கூட்டமைப்புக்கு எச்சரிக்கை

January 22nd, 2010 admin Posted in TELOnews No Comments »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலை அடுத்து வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலிலேயே கண்ணாயிருப்பதாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் தினசரி நாளிதழ் `வலம்புரி` விசனம் தெரிவித்துள்ளது.

’’…தமிழரசுக் கட்சியை புதுப்பித்து, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பதவி பெறும் நோக்கமும் அதற்கான ஒன்றுகூடல்களும் நடக்குமாக இருந்தால், யாழ்ப்பாண மண்ணில் சுதந்திரமான-சேவை நோக்கமுள்ள மனிதர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்குவர். அவ்வாறு களமிறங்கினால் அது வலம்புரிச் சங்கு எடுத்து களமாடிய கண்ண பரமாத்மாவின் குருஷேத்திர வெற்றியாகவே இருக்கும்’’ என யாழ். வலம்புரி தனது இன்றைய நாளிதழ் ஆசிரியர் தலையங்கத்தில் கூட்டமைப்பினருக்கு ஒரு அரசியல் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மஹிந்த 60 விழுக்காடு வாக்குகளால் வெல்வார்

January 21st, 2010 admin Posted in TELOnews No Comments »

60 விழுக்காடுகளுக்கு அதிகமான வாக்குகளால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டுவார் என களனி பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட புதிய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

களனி பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் கலாநிதி ரோஹக லக்மன் பிரியதாச தலைமையில் இந்த கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

கொரியா வழங்கும் 500 கிலோவட் சூரியக்கதிர் மின் நிலையம்

January 21st, 2010 admin Posted in TELOnews No Comments »

இலங்கைக்கு கொரியா அரசு 500 கிலோ வட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய சூரியக்கதிர் மின் நிலையத்தை வழங்க முன்வந்துள்ளது. ஹம்பாந்தோட்டையில் இந்த சூரியக்கதிர் மின் நிலையத்தை அமைக்க Sri Lanka Sustainable Energy Authority திட்டமிட்டுள்ளது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

வவுனியாவில் அரச குடியிருப்பை சிவசக்தி ஆனந்தன் ஆக்கிரமிப்பு

January 19th, 2010 admin Posted in TELOnews No Comments »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வவுனியாவில் அரச குடியிருப்பொன்றை சட்ட விரோதமாக ஆக்கிரமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா இரயில் நிலையத்துக்கு முன்பாக உள்ள அரசுக்கு சொந்தமான குடியிருப்பை கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கடந்த எட்டு ஆண்டுகளாக சட்ட விரோதமாக ஆகிரமித்துள்ளதை வவுனியா கச்சேரில் பணி புரியும் மேல்நிலை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார்.  Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

`நாமல் ராஜபக்‌ஷவின் லண்டன் புகைப்படம்` : அம்பலமாகும் `உண்மை`

January 16th, 2010 admin Posted in TELOnews No Comments »

நாமல் ராஜபக்ஷ அண்மையில் லண்டனுக்குச் சென்றிருந்ததுடன் விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் எமில் காந்தனை இரகசியமாக சந்தித்திருப்பதாக எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேக்காவின் ஊடகப் பேச்சாளர்களான மங்கள சமரவீர மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் தெரிவித்துள்ளனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இந்தியா போல் அமெரிக்காவும் ஜனாதிபதி தேர்தலில் நடுநிலைமை

January 16th, 2010 admin Posted in TELOnews No Comments »

` பிறநாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடுவதில்லை` எனும் இந்தியாவின் வெளிவிவகார கொள்கைக்கு அமைய, இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இந்தியா நடுநிலைமையாக இருக்குமென்பதை டில்லியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நான்கு சிரேஷ்ட எம்.பி.க்கள் குழுவினரை சந்தித்த இந்திய வெளிவிவகாரச் செயலர் நிருபமா ராவ் தெளிவுபடுத்தி உள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

11,000 முன்னாள் புலி உறுப்பினர்களில் ஒரு தொகுதியினர் விரைவில் விடுதலை; ஏனையோரும் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படுவர்

January 14th, 2010 admin Posted in TELOnews No Comments »

சிறப்பு புனர்வாழ்வு முகாமிலுள்ள 11,000 மேற்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களில் ஒரு தொகுதியினர் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளனர்.  ஏனையோரும் கட்டம் கட்டமாக தொடர்ந்து விடுதலை செய்யப்படுவார்களென இவர்களின் புனர்வாழ்வுக்குப் பொறுப்பான அதிகாரி ஒருவர் `ரெலோ நியூஸ்`க்கு தெரிவித்தார்.

2009 மே 18க்கு பின் இராணுவத்தால் இனங் காணப்பட்ட முன்னால் புலி உறுப்பினர்கள் மற்றும் யுத்த காலத்தில் சரணடைந்த புலிகள் உட்பட சுமார் 11,000 பேருக்கு மேல் அரசின் சிறப்பு முகாம்களில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button