`ஆட்சி` மாற்றமா `ஆள்` மாற்றமா : சம்பந்தரிடம் பதில்கோரும் ஸ்ரீகாந்தா

January 13th, 2010 admin Posted in TELOnews No Comments »

ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பு எடுத்த அரசியல் சார்பு நிலையை கேள்விக்கு உள்ளாக்கி அந்த முடிவை அடைய முழு மூச்சாக உழைத்த சம்பந்தரிடம் பதில் கோரும் `ஆட்சி` மாற்றமா? ‘ஆள்` மாற்றமா? எனும் தலைப்பில் துண்டுப் பிரசுரமொன்றை யாழ் மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் என். ஸ்ரீகாந்தா வெளியிட்டுள்ளார்.

வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்.கே. சிவாஜிலிங்கத்தை ஆதரித்து வெளியிடப்பட்ட அந்த தேர்தல் துண்டுப் பிரசுரத்தில் கூட்டமைப்பின் தேர்தல் நிலைப்பாட்டை ஆதரிக்கும் யாழ் `உதயன்` போன்ற ஊடகங்களை `பச்சை` பொய்களை வெளியிடும் தமிழ் பத்திரிகை துறையின் பிரகிருதிகள் என காட்டமாக சாடியுள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ஜனாதிபதியின் வருகைக்காக தயாராகும் மன்னார்

January 7th, 2010 admin Posted in TELOnews No Comments »

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்துக்காக எதிர்வரும் 9ஆம் திகதி மன்னார் வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வரவையொட்டி மன்னாரில் பிரமாண்டமான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற இருக்கும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் மற்றும் பொதுமக்கள் சந்திப்பிற்கான விரிவான ஏற்பாடுகள் கடந்த சில தினங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தனது சொந்த மாவட்டமான திருகோணமலையில் சுதந்திரக் கட்சியை பழிதீர்க்க கூட்டமைப்பை பலிக்கடா ஆக்கிவிட்டார் சம்பந்தர்

January 6th, 2010 admin Posted in TELOnews No Comments »

அவரது சொந்த தேர்தல் மாவட்டமான திருகோணமலையில் சுதந்திரக் கட்சியை பழிதீர்க்க இந்த ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பை பலிக்கடா ஆக்கிவிட்டார் சம்பந்தர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ‘ரெலோ நியூஸ்’க்கு தனது மனக் குமுறலைக் கொட்டித்தீர்த்தார்.

திருகோணமலை மாநகர சபை தலைவர் முகுந்தன் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் பலரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்வாங்கியமைக்கு ஒரு எதிர்வினையாகவே சம்பந்தர் இந்த ஜனாதிபதி தேர்தலில் கூட்டமைப்பு சரத்தை ஆதரிக்க வைக்கும் முடிவை எடுக்க ஆரம்பம் முதல் ஒற்றை காலில் நின்றார் என்றார் தனது பெயரை வெளியிட விரும்பாத கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

சரத் பொன்சேகாவை ஆதரிக்க கூட்டமைப்பு முடிவு

January 4th, 2010 admin Posted in TELOnews No Comments »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்க முடிவெடுத்துள்ளதாக பொன்சேகாவின் அரசியல் பணிமனை தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமான `டெய்லி மிரர்` இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இன்று பிற்பகல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இராயவரோதயம் சம்பந்தனுக்கும் ஜனாதிபதி வேட்பாளர் ஓய்வு பெற்ற இராணுவ ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் நிகழ்ந்த சந்திப்பின் பின் கூட்டமைப்பு சார்ப்பில் இரா. சம்பந்தன் மேற்படி முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

AddThis Social Bookmark Button

மன்னாரில் புதிய மேல் நீதிமன்ற வளாகத்துக்கு அடிக்கல் நடுகை

December 25th, 2009 admin Posted in TELOnews No Comments »

மன்னார் மாட்டத்திற்கென புதிதாக நிர்மாணிக்கப்படவிருக்கும் மேல் நீதிமன்ற வளாகத்துக்கு அடிக்கல்லினை பிரதம நீதியரசர் உத்தியோக பூர்வமாக நட்டுவைத்திருக்கின்றார்.

நீதி மறுசீரமைப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மன்னார் நீதிமன்ற வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் மாடிக் கட்டிடத்தினை திறந்து வைத்த பிரதம நீதியரசர் ஜெ.ஏ.என்.டி. சில்வா அவர்கள் புதிய மேல் நீதிமன்ற வளாகத்துக்கான அடிக்கல்லினையும் குறித்த தினத்தில் நட்டுவைத்திருக்கின்றார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மூன்று இலட்சம் மக்களையும் அவமானப்படுத்துகிறார் தமிழ்வாணி குமார்

December 21st, 2009 admin Posted in TELOnews No Comments »

இடைத்தங்கல் முகாம்களில் வாழ்ந்த மூன்று இலட்சம் மக்களையும் தமிழ்வாணி குமார் அவமானப்படுத்தி விட்டாரென இன்னும் அந்த முகாமில் மூன்று வளர்ந்த பெண் பிள்ளைகளுடன் வாழும் கண்டாவளையை சேர்ந்த அன்னபாக்கியம் `ரெலோ நீயூஸ்`க்கு தெரிவித்தார்.

லண்டனில் உள்ள அன்னபாக்கியத்தின் கணவர் மூலம் நாம் அவரை தொடர்பு கொண்டு, வவுனியா இடைத்தங்கல் முகாமிலிருந்து வெளியேறி தற்போது பிரிட்டன் எஸெக்ஸில் வசிக்கும் மருத்துவ உதவியாளரான தமிழ்வாணி குமார், தமிழ்ப் பெண்கள் ஒருவேளை உணவுக்காகக் கூட தம்மை படையினருக்கு விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனரென பிரித்தானிய பத்திரிகைக்கு தெரிவித்தமை குறித்து கேட்டபோது `முகாம்களில் வாழ்ந்த மூன்று இலட்சம் மக்களையும் அவர் அவமானப்படுத்தி விட்டார்` எனத் தெரிவித்தார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை ஆதரிக்கலாம்

December 21st, 2009 admin Posted in TELOnews No Comments »

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பினருக்கும் இடையில் நேற்று இரவு கொழும்பில் ஒரு விசேட சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இச்சந்திப்பின் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரத் பொன்சேகாவை ஆதரிக்கலாமென கொழும்பில் பலமான ஒரு செய்தி உலாவுவதாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரை ஆதரிக்கும் சிங்கள பத்திரிகையொன்றில் பணிபுரியும் ஊடகவியலாளர் ஒருவர் `ரெலோ நீயூஸ்`க்கு கருத்து தெரித்தார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இவர் துவாரகா அல்ல! இசைப்பிரியா!!!

December 20th, 2009 admin Posted in TELOnews No Comments »

அண்மையில் இணையத் தளங்களில் வெளியான மரணமடைந்த நிலையில் கிடந்த பெண்ணின் புகைப்படம் புலிகளின் தலைவர் பிரபாகரன் மகள் துவாரகாவினுடயைதல்ல என தமிழ் இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளன. துவாரகாவின் சடலத்தை தாம் கண்டெடுக்கவில்லை என இலங்கை ராணுவச் செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரவும் தெரிவித்திருந்தார்.

புலிகளின் நிதர்சனம் பிரிவின் மகளிர் பிரிவு போராளியும், போராளிக் கலைஞரும், செய்தி வாசிப்பாளரும் ஆகிய இசைப்பிரியா என்பவர்தான் மேற்படி புகைப்படத்தில் உள்ளவர். இவர் புலிகளின் கடற்படையின் தளபதியுமாக இருந்த சிறீராம் என்பவரின் மனைவியும் ஆவார்.  Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மன்னாரில் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைந்த பாடில்லை

December 19th, 2009 admin Posted in TELOnews No Comments »

மதவாச்சி சோதனைச்சாவடி பொது போக்குவரத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளபோதிலும் மன்னாரில் அத்தியாவசியப் பொருட்கள் உட்பட எந்தவொரு பொருட்களுக்குமான விலைகள் இதுவரையிலும் குறையடையவில்லை என மன்னார் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

யுத்தம் உக்கிரமாக இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் வடபகுதிக்கான அனைத்து போக்குவரத்துக்களும் மதவாச்சி சோதனைச்சாவடியுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

இலுப்பக்கடவை பகுதியில் மீள் குடியேற்றம் ஆரம்பம்

December 19th, 2009 admin Posted in TELOnews No Comments »

மன்னாரின் மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்குட்பட்ட இலுப்பைக்கடவை பகுதியில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் இம்மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் கடந்த 17 ம் திகதி இலுப்பக்கடவை பகுதியில் 129 குடும்பங்களைச்சேர்ந்த 515 நபர்கள் தனியார் பேருந்து நான்கில் அழைத்துச் செல்லப்பட்டு மீள் குடியேற்றப்பட்டிருக்கின்றனர். நலன் புரிநிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் வடமாகாணத்தின் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் கட்டம் கட்டமாக மீள் குடியேற்றப்பட்டு வருகின்றனர். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ஏ-9 வீதியூடான பிரயாணத்தை மேலும் இலகுவாக்க வேண்டும்

December 19th, 2009 admin Posted in TELOnews, ஊடக அறிக்கை No Comments »

யாழ்ப்பாணத்தில் இருந்து இராணுவ அனுமதி பெற்று வந்தவர்கள் மட்டுமே வவுனியாவில் இருந்து கண்டி-யாழ் ஏ-9 வீதியூடாக யாழ்ப்பாணத்துக்கு பஸ்களில் பிரயாணம் செய்ய அனுமதிக்கப்பட்ட நடைமுறை கடந்த மாதம் நடுப்பகுதியில் தளர்த்தப்பட்டு, நாட்டின் எப்பகுதியிலிருந்தும் யாழ்ப்பாணம் செல்பவர்கள் வவுனியா ஈரப்பெரியகுளம் சோதனைச்சாவடியில் தமது அடையாள அட்டையின் போட்டோ பிரதி ஒன்றைக் கொடுத்து, அதில் இராணுவ அதிகாரியின் கையெழுத்து முத்திரையைப் பதித்துக் கொண்டு பிரயாணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த ஏற்பாடு யாழ்-கண்டி வீதியூடான பிரயாணங்களில் உள்ள கட்டுப்பாடுகளை ஓரளவு தளர்த்தியுள்ளதை நாம் முழுமையாக வரவேற்பதோடு ஏ-9 ஊடாக பொதுமக்களின் பிரயாணத்தை மேலும் இலகுவாக்க புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்துமாறு சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (சிறீ-ரெலோ) சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் வினயமாக கோருவதுடன் பொதுமக்கள் சார்பில் சில ஆலோசனைகளையும் முன்மொழிகின்றது. Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

எஸ்.எம்.எஸ் திருமூர்த்திகள் ரி.என்.ஏ.யில் ஏகபோகம்: எம்.பி. தங்கேஸ்வரி

December 18th, 2009 admin Posted in TELOnews No Comments »

எஸ்.எம்.எஸ் [Sampanthar Mavai-senathirajah, Suresh-premachandran] திருமூர்த்திகள் ரி.என்.ஏ.யில் (Tamil National Alliance) ஏகபோக ஆதிக்கம் செலுத்துவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கே. தங்கேஸ்வரி குற்றச்சாட்டியுள்ளார். யாரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்க நான் விரும்பவில்லை. எதிர்காலத்தில் முகம் கொடுக்க வேண்டிய ஆபத்துகளில் தமிழ் மக்களின் பாதுகாப்பரனாக இருக்க கூடியது ஒரே அரசியல் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்புதான். ஆகவே, ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டுமென கூட்டமைப்பின் கூட்டத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தங்கேஸ்வரி தெரிவித்தார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

தாய்லாந்தில் தடுக்கப்பட்ட ஆயுத விமானம் இலங்கைக்கு வரவில்லை

December 13th, 2009 admin Posted in TELOnews No Comments »

வடகொரியாவில் இருந்து ரஸ்யா தயாரிப்பான ஐ.எல்.76 இராணுவ சரக்கு விமானம் டொன் மியன்ங் விமானா நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக தரை இறங்கிய போது, தாய்லாந்து அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், தாய்லாந்து ஊடகங்கள் அவ்விமானம் இலங்கை நோக்கி பயணித்ததாக வெளியிட்ட செய்திகளை தேசிய பாதுகாப்பு ஊடக மையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹலுக்கல மறுத்துள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகள் சார்பில் `லங்கா ராணி` அருளர்

December 13th, 2009 admin Posted in TELOnews No Comments »

இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான தினம் நெருங்கி வரும் நிலையில், தேர்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு முடிவுக்கு வரமுடியாத நிலையில், ஈரோஸ் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான `லங்கா ராணி` அருளர் என்கிறழைக்கப்படும் ஏ. ஆர். அருட்பிரகாசம் தமிழ் கட்சிகளின் பொது வேட்பாளராக வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button

மன்னார் நுழைவாயில் சோதனைகள் இதுவரை நிறுத்தப்படவில்லை

December 12th, 2009 admin Posted in TELOnews No Comments »

மன்னார் நுழைவாயிலில் அமைந்துள்ள கோட்டை காவலரணில் மேற்கொள்ளப்படுகின்ற சோதனை நடவடிக்கைகள் அனைத்தும் இம்மாதம் 10ம் திகதி முதல் நிறுத்தப்படும் என ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பஷில் ராஜபக்ஷ அறிவித்திருந்த போதும் அது இதுவரையிலும் அமுலுக்கு வரவில்லை.

அமைச்சர் றிசாட் பதியுதீனின் அழைப்பின் பெயரில் இம்மாதம் 5 ம் திகதி (05.12.2009) மன்னாருக்குக் விஜயம் ஒன்றை மேற்கொண்ட ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பஷில் ராஜபக்ஷ மன்னார் நகர மண்டபத்தில் பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் மத்தியில் உரையாற்றினார். Read the rest of this entry »

AddThis Social Bookmark Button