பிரித்தானிய பிரதமர் அலுவலகம் இரு தினங்களுக்கு (ஏப். 26) முன்பு, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலி பான்ட், பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் கெளச்சல், மற்றும் சுவீடன் வெளிவிவகார அமைச்சர் சால்ஸ் பில்ட்ற் ஆகியோர் சிறிலங்காவுக்கான உத்தியோகபூர்வ பயணம் ஒன்றை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்திருந்தது. இந்நிலையில், பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்கள் கொழும்பு வருவதற்கான அனுமதியை வழங்கிய இலங்கை அரசாங்கம், சுவீடன் நாட்டு வெளிவிவகார அமைச்சரின் வருகைக்கு அனுசரணை வழங்க தாமதிப்பதாக செய்திகள் வெளியாகின. Read the rest of this entry »











படையினரின் மனிதாபிமான மீட்டுப் பணி தீர்மானகரமான ஒரு கட்டத்தை நெருங்கிய போது மக்கள் பாதுகாப்புக்காக இராணுவம் கடந்த ஜனவரி ஆரம்பத்தில் ‘யுத்த சூனிய பிரதேசம்’ என சில பகுதிகளை அறிவித்தது. அப்பகுதிக்குள் வந்த பொது மக்களின் வாழ்வாதாரத்துக்கான நிவாரணப் பொருட்களையும் கப்பல் மூலம் தொடர்ந்து அனுப்பி வந்துள்ளது. அவ்வாறு பாதுகாப்பு வலயத்திலுள்ள மக்களுக்காக அனுப்பப்பட்ட அத்தியாவசிய நிவாரணப் பொருட்களை முழுமையாகப் புலிகள் பறித்து எடுத்து அவற்றை மக்களுக்கு அதிக விலைக்கு விற்றுள்ளதாகவும் அவைகள் தங்களால் வாங்கக்கூடிய விலைக்கு அப்பாற் பட்டதாகவும் இருந்ததாக அங்கிருந்து தப்பி வந்த மக்கள் சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர். 
