ஐக்கிய தேசியக் கட்சிக்கு விடைகொடுக்கும் ரவி, நவீன், அர்ஜுன விரைவில் ஐக்கிய மக்கள் சக்தியுடன்

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உப தலைவர் ரவி கருணாநாயக்க, தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க மற்றும் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் கட்சியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளனர்.

2021ம் ஆண்டு தொடக்கத்தில் கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்த போதும் அவர் அந்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியுள்ளார்.

அண்மையில் நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் மீண்டும் கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கட்சியில் புதிய பதவிகள் வழங்கும் விடயத்தில் தான்தோன்றித்தனமாக முடிவு எடுத்துள்ளதாக சிலர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் ரவி, நவீன், அர்ஜுன ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.

விரைவில் இவர்கள் சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைந்து கொள்வர் எனவும் கூறப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply