மத்ரஸா மாணவர்களை கடத்திச்செல்ல முயற்சி
புத்தளம், அல்-ஹஸனாத் வீதியில் சிறுவர்களைக் கடத்துவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சம்பவம் ஒன்று செவ்வாய்க்கிழமை (10) பதிவாகியுள்ளது. அல்-ஹஸனாத் பள்ளிவாசல் வீதி, எட்டாவது ஒழுங்கையில் அமைந்துள்ள குர்ஆன் மத்ரஸாவிலிருந்து காலை நேரப் பாட முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 2 சிறுவர்களை, முகக்கவசம் அணிந்திருந்த நான்கு மர்ம நபர்கள் துரத்தியுள்ளனர்.
இதன்போது அச்சமடைந்த சிறுவர்கள் அங்கிருந்து ஓடி தப்பியுள்ளனர். வீதியோரத்தில் வெள்ளை நிற வாகனமொன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும், அதிலிருந்தவர்களே தங்களைத் துரத்தியதாகவும் சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்றதொரு கடத்தல் முயற்சி கடந்த வாரமும் இதே வீதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் உண்மையானது என்பதை அல்-ஹஸனாத் பள்ளிவாசலின் பேஷ் இமாம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் புத்தளம் மாநகர முதல்வர், புத்தளம் நகர பள்ளிவாசல் நிர்வாகத்தினர் மற்றும் காவல்துறையினரின் கவனத்திற்கு பெற்றோர்களால் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply