கொழும்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியது

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் களாக அடையாளம் காணப்பட்ட 674 பேரில் 197 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித் துள்ளது.

நாராஹேன்பிட்டி பகுதியில் 29 பேர், கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் 19 பேர், கல்கிசை பகுதியில் 18 பேர், மொரட்டுவ பகுதியில் 13 பேர், பிலயந்தல பகுதியில் 12 பேர், வெள்ளத்தைப் பகுதியில் 11 பேர், கொழும்பு கோட்டை பகுதியில் 10 பேர் நேற்றைய தினம் தொற் றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளனர் .

கம்பஹா மாவட்டத்தில் 165 பேர், நீர் கொழும்பு பகுதியில் 49 பேர், நிட்டமுவ பகுதியில் 21 பேர், வத்தளை பகுதியில் 17 பேர் மற்றும் கட்டுநாயக்க பகுதியில் 15 பேர் நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள் ளனர் .

குருணாகல் மாவட்டத்தில் 54 பேர் , காலி மாவட்டத்தில் 37 பேர் ,இரத்தின புரி மாவட்டத்தில் 33 பேர் , மாத்தறை மாவட் டத்தில் 24 பேர், கண்டி மாவட்டத்தில் 22 பேர் , களுத்துறை மாவட்டத்தில் 20 பேர், மொனராகலை மாவட்டத்தில் 15 பேர் அடையாளம் காணப் பட்டுள்ளனர் .

மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட் டங்களில் தலா 11 பேர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

அம்பாறை மாவட்டத்தில் 09 பேர் , திருகோணமலை மாவட்டத்தில் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .
மாத்தளை , பொலன்னறுவை, வவுனியா ஆகிய மாவட் டங்களில் தலா 04 பேர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

பதுளை மாவட்டத்தில் 03 பேர் , மன்னார் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தலா 02பேர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

அனுராதபுரம், யாழ்ப்பாணம், கேகாலை ஆகிய மாவட்டங் களில் தலா ஒருவர் என்ற அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

அத்துடன் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 47 பேர் அடங் கலாக நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply