இப்போதைக்கு மாகாண சபை தேர்தல் அவசியமில்லை: அமைச்சர் சரத் வீரசேகர
மாகாண சபைத் தேர்தலை நடத்த எவ்வித தீர்மானமும் தற்போது எடுக்கவில்லை என பொலிஸ் துறை அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
“ஒரு நாடு ஒரு சட்டம் என்றால் 9 மாகாணங்களுக்கும் தனித்தனி சட்டம் இருக்க முடியாது. மாகாண சபை தேர்தல் நடத்துவது குறித்து முடிவு எடுக்கவில்லை. நாம் புதிய யாப்பு தயாரிப்போம். மத்திய அரசாங்கத்திற்கு அதிக அதிகாரங்களை வைத்துக் கொண்டு செய்தால் சிறப்பு” என சரத் வீரசேகர தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்த சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்குமாறே ஜனாதிபதி கூறியதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply