சவுதி அரேபியாவில் பஸ் கவிழ்ந்து தீப்பிடித்தது : 20 பேர் பலி
சவுதி அரேபியாவின் தெற்கு மாகாணமான ஆசிரில் பஸ் ஒன்று மெக்காவுக்கு சென்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் உம்ரா பயணமாக மெக்காவுக்கு பயணம் செய்தனர். அப்போது ஒரு பாலம் ஒன்றில் பஸ் சென்றபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.
தாறுமாறாக ஓடிய பஸ் பாலத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் பஸ் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 20 பேர் பலியானார்கள். 29 பேர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பலியானவர்கள் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பெயர், விவரங்களை வெளியிடவில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply