இலங்கையில் கடும் வெப்பம் காரணமாக ஒருவர் உயிரிழப்பு

கடும் வெப்பமான வானிலை காரணமாக துவிச்சக்கரவண்டியை செலுத்திய ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை திடீரென தரையில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

அக்குரஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 72 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .

இந்தநிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள வெப்பமான காலநிலையிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .

தற்போதைய மழையுடனான வானிலை ஐந்து நாட்களுக்கு நீடிக்கும் என்றும் வெப்பமான வானிலை மீண்டும் உருவாகலாம் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply