வவுனியாவில் குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து கொள்ளையிட்ட மூவர் கைது

வவுனியாவில் குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பெண்ணிடம் நகைகளை கொள்ளையிட்ட மூவரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று(26.04.2024) இடம்பெற்றுள்ளது.

வவுனியா, சிந்தாமணிப் பிள்ளையார் ஆலய வீதி ஊடாக கடவுச் சீட்டு அலுவலகத்திற்கு கடந்த 17 ஆம் திகதி அதிகாலை குறித்த பெண் தனது குழந்தையுடன் மோட்டர் சைக்கிளில் சென்றுள்ளார்.

இதன்போது வீதியில் முகத்தை துணிகளால் கட்டியபடி நின்ற மூன்று இளைஞர்கள் குறித்த பெண்ணை வழிமறித்து அவருடைய குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த நகைகளை அபகரித்ததுடன், குறித்த பெண்ணின் மோட்டர் சைக்கிளையும் பறித்து சென்றுள்ளனர்.

இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிதம்பரபுரம், மதவுவைத்தகுளம், சிறிராமபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 34 தொடக்கம் 35 வயதுடை 3 இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply