யாழில் பதிவற்ற மோட்டார் வாகனம், வாளுடன் கைது

யாழில் பதிவற்ற மோட்டார் வாகனம் ஒன்றினையும் ஐந்து வாளினையும் யாழ்ப்பாணம் பொலிசார் வெள்ளிக்கிழமை (21) அதிகாலை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் விசேட ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த யாழ்ப்பாணம் பொலிசார் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த மோட்டார் வாகனத்தின்  வழிமறித்து சோதனையிட்ட நிலையில் வாகனப் பதிவு இன்றி வாகனம் பயணித்தமை தெரியவந்தது.

இதனையடுத்து சந்தேகநபரான நவாலி பகுதியினை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் அவரது வீட்டிலிருந்து ஐந்து வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply