அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெறும் ஜூலை மாதத்துக்கான யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டுன் மூலம் யாழ். மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 322 மில்லியன் நிதியின்மூலம் மேற்கொள்ளப்படும் மற்றும் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களை வினைத்திறனாக நடைமுறைபடுத்துவதற்கான கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இணைத்தலைவரும் வடக்கின் ஆளுனருமான திருமதி சாள்ஸின் பிரசன்னத்துடன் இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது உறுமய காணி உரிமம் வழங்கல், சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தலின் முன்னேற்றம், வீட்டுத்திட்டம், காணி விடுவிப்பு, குடி நீர் வழங்கல், வீதி அமைப்பு மற்றும் புனரமைப்பு, விவசாய நலன்கள், சுண்ணக்கல் அகழ்வு மற்றும் வெளி இடங்களுக்கு சட்டவிரோதமச்க கொண்டு செல்லல், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளன.
குறித்த கூட்டத்தில் அரசாங்க அதிபர் பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் ஸ்ரீமோகன், பிரதேச சபைகளின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், துறைசார் அரச நிறுவனங்களின் அதிகாரிகள் பாதுகாப்பு தரப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply