சூதாட்ட விடுதியில் இளைஞன் கொலை

புத்தளம், ஆனமடுவ பிரதேசத்தில் உள்ள சூதாட்ட விடுதி ஒன்றில் ஏற்பட்ட தகராறில் இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இளைஞனின் மாமாவும் அத்தையும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

ஆனமடுவ, வடத்த, ஹல்மில்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொலை செய்யப்பட்ட இளைஞனின் தாயின் இளைய சகோதரனும் அவரது மனைவியுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இளைஞனின் மாமா நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மேலும் இளைஞனின் மாமாவும் அத்தையும் ஆனமடுவ பிரதேசத்தில் சூதாட்ட விடுதி ஒன்றையும் நடத்தி வந்துள்ளனர்.

சம்பவத்தன்று கொலை செய்யப்பட்ட இளைஞன் தனது மாமாவின் சூதாட்ட விடுதிக்கு சென்றுள்ளார்.

இதன்போது இளைஞனுக்கும் மாமாவுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் தகராறாக மாறியுள்ளது.

தகராறின் போது கோபமடைந்த மாமா, தனது சகோதரியின் மகன் என்றும் பார்க்காமல் இளைஞனை பொல்லால் தாக்கி கொலை செய்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply