பலத்த காற்றால் மரங்கள் விழுந்து சேதம் கொழும்பில் பாதிப்பு

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று (29) இரவு வீசிய பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு – காலி வீதியில் கொள்ளுப்பிட்டியிலிருந்து வெள்ளவத்தை வரையிலும், கிரேண்ட்பாஸ் பகுதியை சுற்றியுள்ள பல பகுதிகளிலும் மரங்கள் விழுந்து கிடப்பதைக் காணமுடிகிறது.

கிரேண்ட்பாஸ் புனித ஜோசப் வீதியில் பெரிய அளவிலான மரம் ஒன்று விழுந்ததால், அருகில் இருந்த 6 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் உயிராபத்துக்கள் ஏதும் ஏற்படவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply