ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஒரு மில்லியன் யூரோ நிதியுதவி
டித்வா சூறாவளியை அடுத்து ஏற்பட்ட பேரனர்த்தத்தினால் நாடு முகங்கொடுத்திருக்கும் மனிதாபிமான நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கு மேலும் ஒரு மில்லியன் யூரோ (சுமார் 370 மில்லியன் ரூபா) நிதியுதவியை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
பேரனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிப்பதிலும், நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிவாரண வழங்கல் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துவதிலும் தாம் கொண்டிருக்கும் கடப்பாட்டை இந்த மேலதிக நிதியுதவி மூலம் மீளுறுதிப்படுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இந்நிதியுதவியானது மனிதாபிமான உதவி வழங்கல் அமைப்புக்கள் ஊடாக மக்களைச் சென்றடையும் எனவும், இந்நிதி அடிப்படை சேவை வழங்கல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் டித்வா சூறாவளியினால் ஏற்பட்ட பேரனர்த்தத்தை அடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசியமான உடனடி மனிதாபிமான உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கென ஐரோப்பிய ஒன்றியம் தமது சக முகவரமைப்புக்கள் ஊடாக 2.35 மில்லியன் யூரோ நிதியுதவியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply