ஈரானின் புதிய உச்சத் தலைவராக முஜ்தபா கமேனி
ஈரானின் புதிய உச்சத் தலைவராக முன்னாள் உச்சத் தலைவர் அலி கமேனியின் இரண்டாவது மகனான மொஜ்தபா கமேனி அறிவிக்கப்பட்டுள்ளார். Kmஇந்தத் தீர்மானம், 88 உறுப்பினர்களைக் கொண்ட மூத்த மதத் தலைவர்கள் அடங்கிய நிபுணர் சபையினால் எடுக்கப்பட்டுள்ளது.
1979ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதிலிருந்து, இந்த அமைப்பு புதிய உச்ச தலைவரை தேர்வு செய்தது இதுவே இரண்டாவது முறை என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்ட தாக்குதலில் ஈரானில் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply