இலங்கை கடல் எல்லைக்கு அருகில் அமெரிக்காவின் பிடியில் மற்றொரு ஈரானிய கப்பல்
இலங்கை கடல் எல்லைக்கு அருகாமையில் சிங்கப்பூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த, ஈரானுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் எரிபொருள் கப்பல் ஒன்று அமெரிக்காவினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு தென்கிழக்கே 700 கிலோமீட்டர் தொலைவில் பயணித்துக்கொண்டிருந்த போதே இந்தக் கப்பல் அமெரிக்க கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், ‘மெரீன் ட்ராஃபிக்’ (Marine Traffic) தரவுகளின்படி, இது சுமார் 3 இலட்சம் தொன் கொள்ளளவு கொண்ட கச்சா எண்ணெய் கப்பலாகும். இந்தக் கப்பலுக்கு ஐக்கிய அமெரிக்க வெளிநாட்டு சொத்துக்கள் கட்டுப்பாட்டு அலுவலகத்தினால் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கப்பல் இந்திய கப்பல் நிறுவனம் ஒன்றுடன் தொடர்புடையது என்ற தகவலும் வெளியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply