நேரடி கண்காணிப்பின் கீழ் வடக்கு மக்களுக்கு மலேசியா உதவி
வடக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்காக மலேசிய அரசாங்கம் ஒரு மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளதாக மலேசிய தமிழர் பேரவையின் தலைவர் என்.ஐங்கரன் தெரிவித்துள்ளார்.
இந்த நிதி இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகளுக்கோ அல்லது தனிப்பட்டவர்களுக்கோ வழங்கப்படமாட்டாது என அவர் தெரிவித்துள்ளார்.
மலேசிய தமிழர் பேரவையின் நேரடி கண்காணிப்பின் கீழ் இந்த நிதி வட மாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் எனவும் ஐங்கரன் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே மலேசிய அரசாங்கத்தினால் வட மாகாணத்திற்கு வழங்கப்பட்ட நிதியில் மோசடிகள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன.
வடக்கு மக்களின் வாழ்வாதார மேம்பாடு மற்றும் மீளமைப்பு பணிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது.
மலேசிய தமிழர் பேரவை கடந்த 2009 ம் ஆண்டு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேசியத் தமிழர்களைக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்ட நிலையில், இடம்பெயர்ந்த மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதேவேளை, ஜப்பானிய அரசாங்கம் 11.7 மில்லியன் ரூபாய்களை வடக்கு விவசாய, சமூக மற்றும் வாழ்வாதார மேம்பாடுகளின் பொருட்டு வழங்கியுள்ளது.
வவுனியா, உள்ளிட்ட வட பிராந்தியத்தின் பலபகுதிகளுக்கு இந்த நிதியின் மூலம் அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் வவுனியா உள்ளிட்ட பகுதிகளில் 625 மீள்குடிமர்த்தப்பட்ட குடும்பங்கள் பயனடையவுள்ளதாக ஜப்பான் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply