யுத்தம் மூலம் அடைய முடியாத ஒன்றை அடைவதற்கு 13வது சட்டம் எடுக்கப்பட்டுள்ளது
மாகாணசபை முறைமை பலவந்தமாக எம்மீது திணிக்கப்பட்ட ஒரு அரசியல் முறை என பொறியியல் மற்றும் நிர்மானத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். இன்று கண்டிக்கு விஜயம் செய்த அவர் மல்வத்தை மகா நாயக்கத் தேரர் திப்படுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் மகா நபயக்கத் தேரர் உடுகம ஸ்ரீ புத்தரகித்த தேரர் ஆகியோரை சந்தித்து நல்லாசி பெற்ற சமயம் அவர் அங்கு 13வது அரசியல் அமைப்பு தொடர்பான மகஜர் ஒன்றைக் கையளித்த போது இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
1987ஆம் ஆண்டு அரசியல் அமைப்பின் 13ஆவது திருத்தம் பலவந்தமாக எம்மீது திணிக்கப்பட்ட ஒன்று. யுத்தத்தின் மூலம் அடைய முடியாத ஒன்றை அடைவதற்கு தற்போது 13 வது திருத்தம் பற்றி பேசப்படுகிறது.
ஏகாதிபத்திய வாதிகளின் உத்தரவிற்கு அமைய சர்வதேச வாதிகள் கொண்டு வரும் ஒரு புரளி அது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply