ஆசியாவில் செல்வாக்குச் செலுத்துவோர் பட்டியலில் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 28 ஆவது இடம்

ஆசியாவில் செல்வாக்கு மிக்க 100 பேரின் பட்டியலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு 28ஆவது இடம் கிடைத்துள்ள அதேவேளை, முதலாவது இடத்தை சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பெற்றுள்ளார்.

பிரித்தானியாவின் ஆசிய விருதுகள் அமைப்பினால், ஆண்டுதோறும் ஆசியாவில் செல்வாக்குமிக்க 100 பேர் தெரிவு செய்யப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் 2013ஆம் ஆண்டுக்கான இந்தப் பட்டியல் நேற்று முன்தினம் லண்டனில் வெளியிடப்பட்டது.

இதேவேளை, இரண்டாவது இடத்தை இந்தியாவின் காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தியும் 3ஆவது இடத்தை சீன பிரதமர் லீ கெகியாங் பிடித்துள்ளனர். நான்காவது இடம் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கும் ஐந்தாவது இடம் ராகுல் காந்திக்கும் கிடைத்துள்ளது.

இந்தியத் தொழிலதிபர் முகேஸ் அம்பானிக்கு 9ஆவது இடமும், இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு 19ஆவது இடமும், இந்திய தொழிலதிபர் லட்சுமி மிட்டலுக்கு 20ஆவது இடமும் கிடைத்துள்ளன.

இதேவேளை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உலகில் செல்வாக்குமிக்க தலைவர்களைத் தெரிவு செய்வதற்கு ரைம் சஞ்சிகை நடத்திய இணையம் மூலமான கருத்துக்கணிப்பில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply