இரகசியங்களை பாதுகாக்கவே அரசு என்னை வெளிநாடு செல்ல முடியாமல் செய்துள்ளது: பொன்சேகா
அரசாங்கம் தனது இரகசியங்கள் வெளியுலகிற்கு தெரியவருவதை தடுக்கும் பொருட்டே தன்னையும், முன்னாள் பிரதம் நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவையும் வெளிநாட்டுக்குச் செல்ல முடியாதவகையில் தடைகளை மேற்கொண்டுள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மூடி மறைக்க முயல்வதாகவும், தான் வெளிநாட்டுக்குச் செல்லும் பட்சத்தில் அதன் நடவடிக்கைகள் சர்வதேச சமூகத்துக்கு தெரியவரக்கூடும் என பயப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மக்களுக்கு உண்மையை தெரிந்துகொள்வதற்கான உரிமையை மட்டுப்படுத்தி மேற்கொள்கொள்ளப்படும் தாக்குதல் தொடர்பில் பேசுவதற்கு எந்நேரமும் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply