மண்டேலா கற்றுத்தந்த பாடங்களை சில அரசியல்வாதிகள் மறந்துவிட்டனர் :சந்திரிகா
இலங்கையின் தற்போதைய நிலைமையை பார்க்கும்போது, அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக சில அரசியல்வாதிகள் மற்ற இனத்தைச் சேர்ந்த மக்களைக் கொல்லவும், தாக்கவும் எரிக்கவும் தயாராக இருக்கிறார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
தாங்கள் சிங்கள பெளத்த தேசத்துக்கு மட்டுமே பிரதிநிதிகள் என்று காட்டுவதற்காகவே மற்ற சமயங்களை, இனங்களை, சமூகங்களை ஒடுக்கும் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் சில அரசியல்வாதிகள் கூறு கின்றனர்.
குறிப்பாக 1983ஆம் ஆண்டு இலங்கையில் ஒரு சில சிங்கள கடும்போக்குவாதிகளால் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை நினைத்து நான் அரச தலைவராக தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரியிருந்தேன்.
நாட்டின் தற்போதைய நிலைமை மிக கவலையளிப்பதாக உள்ளது. நாட்டில் இன்றுள்ள சிங்கள மக்கள் அனைவரும் அப்படியில்லை. ஒரு சில சிங்கள அரசியல் வாதிகள் தமிழ் மக்களுக்கு செய்யும் விதங்களை நினைக்க மிகவும் வேதனையாகவுள்ளது.
மண்டேலா துரதிஷ்ட வசமாக இலங்கைக்குவர முடியா விட்டாலும் அவர் கற்றுத்தந்த பாடங்களை மறந்து சில கடும்போக்கு சிங்கள அரசியல்வாதிகள் மற்றைய இன மக்களை கொடுமைப்படுத்துகிறார்கள். இவையெல்லாம் மக்களிடம் வாக்குகளைப் பெறுவதற்காகவே செய்கின் றனர்.
சர்வதேச கூட்டங்களில் மண்டேலாவுடன் அடிக்கடி அரு கில் அமரும் சந்தர்ப்பம் கிடைத்ததை எண்ணி நெகிழ்வடை கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply