ஜெனிவாவில் எத்தகைய தீர்மானம் வரினும் வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றோம் : இராணுவத்தளபதி ரத்நாயக்க

சர்­வ­தே­சத்தின் விருப்­பத்தின்படி நாட்டை மாற்­றி­ய­மைக்க முடி­யாது. ஜெனிவாவில் இலங்­கைக்கு எதி­ராக எவ்­வா­றான தீர்­மானம் கொண்­டு­வ­ரப்­பட்­டாலும் வடக்­கி­லி­ருந்து ஒரு­போதும் இரா­ணு­வத்தை வெளி­யேற்ற மாட்டோம் என்று இரா­ணுவ தள­பதி லெப்­டினன்ட் ஜெனரல் ஆர்.எம்.டி.ரத்­நா­யக்க தெரி­வித்தார். யுத்தம் முடி­வ­டைந்து 5 வரு­டங்­களின் பின்னர் மீண்டும் வடக்கில் தீவி­ர­வா­தத்­தினை உரு­வாக்கும் நோக்கில் பலரும் முயற்­சிக்­கின்­றனர். ஆயினும் பொது மக்­க­ளுக்கு பாதிப்­பினை ஏற்­ப­டுத்தும் எந்­த­வொரு சாத்­தி­யமும் வடக்கில் இடம்­பெ­றாது என்றும் கூறினார். கிளி­நொச்­சியில் நேற்று நடை­பெற்ற ஊட­வி­ய­லா­ளர்­களின் சந்­திப்பின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரி­வித்­த­தா­வது,

சர்­வ­தேச சமூ­க­மா­னது இலங்­கையில் தனக்கு சார்­பான ஓர் ஆட்சி மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றது. 30 வருட கால யுத்தம் முடி­வ­டைந்­துள்ள நிலையில் வடக்கில் பாரிய மாற்­றங்­களும் மக்­க­ளி­டையே சிறந்த ஒற்­று­மையும் ஏற்­பட்­டுள்­ளது. இதனை சீர்­கு­லைக்கும் வகையில் சர்­வ­தே­சத்தின் செயற்­பா­டுகள் அமைந்­துள்­ளது. இதற்கு நாம் ஒரு­போதும் இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை.

அதே போல இலங்­கையில் யுத்தக் குற்­றங்கள் இடம்­பெற்­றுள்­ளன. மற்றும் இறுதி கட்­ட­யுத்­தத்தின் போது பொது மக்கள் கொல்­லப்­பட்­டனர் என்ற குற்றச் சாட்­டு­ககள் தொடர்பில் ஜெனீவா மனித உரிமை பேர­வையில் சர்­வ­தேச அறிக்கை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. புலம் பெயர் தமி­ழர்­களின் எண்­ணங்­களை நிறை­வேற்றும் வகை­யிலோ அல்­லது மீண்டும் நாட்டில் போர் சூழ­லினை ஏற்­ப­டுத்தும் முயற்­சியில் சர்­வ­தேசம் செயற்­ப­டு­மாயின் அதற்­கேற்ப ஜெனீவா தீர்­மானம் எவ்­வா­றாக அமைந்­தாலும் நாம் எமது கொள்­கை­யி­லி­ருந்து பின்­வாங்க மாட்டோம். வடக்­கி­லி­ருந்து இனி ஒரு­போதும் இரா­ணு­வத்தை வெளி­யேற்ற முடி­யாது.

யுத்­தத்தின் பின்னர் வடக்­கி­லி­ருந்து இரா­ணு­வத்­தினர் அதி­க­மா­ன­ளவில் குறைக்­கப்­பட்­டுள்­ளனர் எனினும் முற்றும் முழு­து­மாக வடக்­கி­லி­ருந்து இரா­ணு­வத்தை குறைக்க முடி­யாது. இரா­ணு­வத்தை வெளி­யேற்­றினால் மீண்டும் ஒரு இன­வாத போராட்டம் உரு­வாக வாய்ப்­புள்­ளது.

மேலும் யுத்­தத்தின் பின் மக்கள் இன்று சுமூ­க­மாக வாழ்க்­கையை வாழ்­கின்­றனர். நாட்டில் எல்லா பகு­தி­க­ளுக்கும் செல்லும் வாய்ப்பு ஏற்­பட்­டுள்­ளது. தமிழ் சிங்­கள மக்­க­ளி­டையே ஒற்­றுமை ஏற்­பட்­டுள்­ளது.

எனினும் மீண்டும் சிங்­கள தமிழ் மக்­க­ளி­டையே மோதலை உரு­வாக்கும் சர்­வ­தேச அமைப்­பு­களின் தலை­யீ­டு­க­ளையோ அல்­லது இலங்­கைக்­குள்ளே ஏற்­ப­டுத்தும் பிரி­வினை வாதத்­தி­னையோ தடுப்­பதில் அர­சாங்­கத்­துடன் இணைந்து இரா­ணு­வத்­தினர் பாரிய சேவை­யாற்­று­கின்­றனர். இவ்­வா­றான நிலையில் மீண்டும் யுத்­தத்­தினை ஏற்­ப­டுத்த நாம் இட­ம­ளிக்க மாட்டோம்.

அதே போல வடக்கில் இருக்கும் தமிழ் மக்கள் இரா­ணு­வத்­தி­ன­ருடன் ஒற்­று­மை­யாக வாழ்­கின்­றனர். வடக்கில் அபி­வி­ருத்­தியும் சமூக ஒற்­று­மையும் மேலோங்கி காணப்­ப­டு­கின்­றது. இதனை தொடர்ந்து முன்­னெ­டுத்து இலங்­கையில் சமா­தா­னமும் ஒற்­று­மையும் மேலும் வளர்­வ­தற்கு நாம் செயற்­ப­டுவோம்.

இன்று இரா­ணு­வத்தில் அதி­க­மான தமிழ் இளை­ஞர்கள் இணைத்துக் கொள்­ளப்­பட்­டுள்­ளனர். வடக்கு தமிழ் மக்­களின் பாது­காப்பு செயற்­பா­டு­களை வளர்க்கும் நோக்கில் இராணுவத்தில் தமிழ் இளைஞர்கள் இவ்வாறு சேர்க்கப்பட்டுள்ளனர். இதனை சீர் குலைக்கும் வகையில் பொய்பிரசாரங்களையும் பொய் வீடியோக்களையும் தயாரித்து வெளியிடுகின்றனர். இதன் மூலம் உண்மை நிலை மறைந்து விடப்போவதில்லை.

நாம் வடக்கு தெற்கு என்று அனைத்து மக்களையும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply