ராணுவ ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சை பிரிவில் முஷரப் அனுமதி
பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் மீதான தேசத் துரோக வழக்கில் இன்று (திங்கட்கிழமை) அவர் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம், ஆஜராக தவறினால் அவரை கைது செய்வதற்கு ஜாமினில் வெளிவர முடியாத ‘வாரண்ட்’டையும் பிறப்பித்தது. இதய நோய்க்கான சிகிச்சை அளிக்கும் ராணுவ சிறப்பு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவரும் முஷரப்பிடம் கடந்த சனிக்கிழமை இந்த கைது உத்தரவு வழங்கப்பட்டது.
இன்று அவர் கோர்ட்டுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பில் ராணுவ ஆஸ்பத்திரியில் இருந்து கோர்ட்டுக்கு செல்லும் வழி நெடுகிலும் சுமார் இரண்டாயிரம் போலீசார் கொண்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதற்கிடையில், ஷார்ஜாவில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அவரது தாயாரின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக கேள்விப்பட்ட முஷரப், தாயாரை சென்று சந்திக்க முடியவில்லையே.. என்ற மன உளைச்சலில் இருந்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், கைது வாரண்டை கண்ட முஷரப் பெரும் மன சஞ்சலத்துக்கு உள்ளானார். இதனையடுத்து, ரத்தக் கொதிப்பு அதிகரித்து, அவரது உடல்நிலை மோசமடைந்ததால் நேற்று நள்ளிரவு தீவிர சிகிச்சை பிரிவில் முஷரப் அனுமதிக்கப்பட்டதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply