ஐ.நா. அறிக்கை செப்­டெம்பரில் எவ்­வித மாற்­ற­மு­மின்றி வெளி­யி­டப்­படும் : கூட்­ட­மைப்­பிடம் ஜெப்ரி பெல்ட்மன் தெரி­விப்பு

இலங்கையில் பதவியேற்றுள்ள புதிய அர சுக்கு மனித உரிமைகளைப் பாதுகாத்தல் மற் றும் முறையான நிர்வாகத்தை மேற்கொள்ளல் என்பவற்றுக்கு ஒரு சந்­தர்ப்­பத்தை வழங்கவே ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் இலங் கை தொடர்­பாக இம்மாதம் வெளி­யி­ட­வி­ருந்த அறிக்­கையை எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் வரை பிற்­போட்­டுள்­ள­தாக ஐ.நா. செய­லாளர் நாயகம் பான் கீ மூனின் அர­சியல் விவ­கா­ரங்­க­ளுக்­கான பிரதி நிதி ஜெப்ரி பெல்ட்மன் நேற்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பு­ட­னான சந்­திப்பின் போது தெரி­வித்தார்.

அறிக்­கையை வெளி­யி­டு­வது ஒரு முறை மாத்­தி­ரமே பிற்­போ­டப்படு­மெ­னவும் செப்­டெம்பர் மாதம் ஜெனீவா மனித உரி­மை கள் பேரவை அமர்வில் இந்த அறிக்கை எது­வித மாற்­ற­மு­மின்றி வெளி­யி­டப்­ப­டு­மெ­னவும் அவர் கூட்­ட­மைப்பு தூதுக்­கு­ழு­விடம் உறு­தி­ய­ளித்­த­தாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் எம்.பி. தெரி­வித்தார்.

கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்றக் குழுத் தலைவர் இரா. சம்­பந்தன் தலை­மை­யி­லான குழு­வினர் நேற்­றுக்­காலை கொழும்­பி­லுள்ள ஐக் கிய நாடுகள் சபை அலு­வ­ல­கத்தில் ஜெப்ரி பெல்ட்­மனைச் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தினர்.

இலங்­கையில் தற்­போது புதிய அர­சாங்­க­மொன்று ஆட்சிப் பொறுப்பை ஏற்­றுள்­ளது. இந்த அர­சாங்கம் பத­விக்கு வரு­வ­தற்கு பல எதிர்­பார்ப்­புக்­க­ளுடன் தமிழ் மக்கள் பெருந்­தொ­கை­யாக வாக்­க­ளித்­துள்­ளனர்.

நூறு நாட்கள் வேலைத் திட்­டத்தின் கீழ் இனப்­பி­ரச்­சினை தீர்வு உட்­பட தமி­ழர்கள் முகம் கொடுக்கும் எந்தப் பிரச்­சி­னைகள் குறித்தும் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை. வடக்கில் இரா­ணு­வத்­தினால் பொது­மக்­க­ளது காணிகள் 6700 ஏக்கர் அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இக் காணியில் 1000 ஏக்­க­ரையும் கிழக்கில் 800 ஏக்­க­ரையும் பொது மக்­க­ளிடம் மீளவும் கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இரா­ணு­வத்­தி­னரால் அப­க­ரிக்­கப்­பட்ட பொது­மக்­களின் காணி­களில் மர­முந்­தி­ரிகை மரங்கள் மற்றும் வயல் நிலங்கள் காணப்­பட்­டன. அவை மீள கைய­ளிக்­கப்­பட வேண்டும்.

மேலும்இ ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் இலங்கை தொடர்­பான அறிக்கை இம் மாதம் வெளி­யி­டப்­படும். இதன் மூலம் புரை­யோடிப் போயுள்ள இனப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு காணும் சந்­தர்ப்பம் ஏற்­ப­டு­மென இலங்கை வாழ் தமிழ் மக்கள் எதிர்­பார்த்­தி­ருந்­தனர். அதிலும் எமது மக்கள் ஏமாற்­றப்­பட்­டுள்­ளனர் என்று ஜெப்ரி பெல்ட்மனிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக் குழு எடுத்து விளக்கியது.

கூட்டணி தூதுக்குழுவின் கருத்துக்களை கவனமாக செவிமடுத்த அவர் ஐ.நா. அறிக்கை செப்டெம்பரில் எவ்வித மாற்றமுமின்றி வெளியிடப்படும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply