குடிநீர் கேட்டு போராடிய மக்களை அடக்கியமை பாரதூரமான குற்றச்செயல்-கம்பஹா நீதவான் தீர்ப்பு
கொழும்பை அண்மித்த புறநகர் பிரதேசமான வெலிவேரிய ரத்துபஸ்வெல பகுதியில் தமக்கான குடிநீரைக் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது இராணுவத்தைக் கொண்டு அடக்கிய சம்பவம் பாரதூரமான குற்றச்செயலென கம்பஹா நீதவான் தீர்ப்பளி த்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலமான 2013 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த சம்பவத்தில், தமக்கான குடிநீரைக் கேட்டு வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை இராணுவத்தைக் கொண்டு அடக்கியதுடன், அதன்போது துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் தாக்குதல் நடத்தியதால் இளைஞர்கள் மூவர் உயிரிழந்தனர்.
சர்வதேச ரீதியிலும் கடும் கண்டனங்களுக்கும், விமர்சனங்களுக்கும் உள்ளாகியிருந்த இந்த சம்பவத்தின் போது கொல்லப்பட்ட இளைஞர்களில் இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாகவும், மூன்றாவது இளைஞரின் தலையில் கூரிய ஆயுதமொன்று தாக்கப்பட்டதால் உயிரிழந்ததாகவும் கம்பஹா நீதவான் காவிந்தியா நாணயக்கார தனது தீர்ப்பில்
குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் ரி 56 ரக 98 இயந்திரத் துப்பாக்கிகள் நீதிமன்றம் கையகப்படுத்தியிருந்த நிலையில் அவை இரசாயன பகுப்பாய்வாளரின் பரிசோதனைக்கு உட்படுத்தியதற்கு அமைய அதில் மூன்று துப்பாக்கிகள் ரத்துபஸ்வெல இளைஞர்களின் படுகொலையுடன் தொடர்புடையமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply