வில்பத்து வர்த்தமானி இன்று ஜனாதிபதி செயலகத்தில் விஷேட கூட்டம்
வில்பத்து சரணாலயத்துக்கு வடக்கே அமைந்துள்ள நான்கு பாதுகாக்கப்பட்ட வனங்களை பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை சிவில் சமூக அமைப்புகள் இரத்துச் செய்யுமாறு கோரியதையடுத்தும், அப்பிரதேச மக்கள் போராட்டங்களை நடத்தியதையடுத்தும் ஜனாதிபதி இன்று சிவில் சமூக பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலொன்றை ஏற்பாடு செய்துள்ளார்.
இதற்கென ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் கமிட்டியொன்றினையும் நியமித்துள்ளதுடன் கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும் கலந்து கொள்ளவுள்ளார்.
இன்று நடைபெறவுள்ள கலந்துரையாடலில் சுமுகமான தீர்வு எட்டப்படாவிட்டால் நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply