பாடசாலை மாணவியின் மீது பாலியல் வல்லுறவு ; இரு மாத கர்ப்பிணியாக்கிய சம்பவம்
பதினான்கு வயதுடைய பாடசாலை சிறுமி மீது பாலியல் வல்லுறவு புரிந்து இரு மாத கர்ப்பிணியாக்கிய சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள களுத்துறை நகரில் உள்ள பிரபல பாடசாலைஒன்றில் கடமையாற்றும் ஆசிரியரை தொடர்ந்தும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு களுத்துறை பிரதம நீதிவான் பாரதி விஜேரத்ன உத்தரவிட்டார்.
இந்த ஆசிரியரின் மனைவியையும் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்த சமயம் இரண்டு இலட்சம் ரூபாவுக்கு இரு சரீரப் பிணையிலும் 15000 ரூபா ரொக்கப்பிணையிலும் செல்ல நீதிவான் அனுமதியளித்தார்.
இவரும் களுத்துறை நகரில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் ஆசிரியையாக கடமை புரிகிறார்.தனது கணவரினால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு இரு மாத கர்ப்பிணியான பாடசாலை சிறுமியின் சிறுநீர் மாதிரியைப் பெற்று பரிசோதனை செய்தமை சிறுமியின் நிர்வாணப் படங்களை எடுத்து கணவர் சேவையாற்றும் பாடசாலை ஆசிரியர்களுக்கு அனுப்பியமை தொடர்பாகவே களுத்துறை பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு பொறுப்பதிகாரி மல்சா துசாரியினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
இந்த ஆசிரியர் தம்பதியினருக்கு கர்ப்பிணியாக்கப்பட்ட 14 வயதுடைய சிறுமியை ஒத்த வயதுடைய பிள்ளைகள் இருப்பதாகவும் தெரிய வருகிறது.
சந்தேக நபரான ஆசிரியருக்கு சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்த அறை வசதி செய்து கொடுத்த களுத்துறை பகுதி விடுதியொன்றின் உரிமையாளர் தலைமறைவாகியுள்ளார். அதன் முகாமையாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். அவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply