உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் குறித்த வர்த்­த­மானி அறி­வித்தல் இன்று வெளியீடு : அமைச்சர் பைஸர் முஸ்­தபா 

புதிய தேர்தல் முறை­யூ­டாக நடத்­து­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்ள உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் தொடர்­பான வர்த்­த­மானி அறி­வித்தல் இன்று வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது. குறித்த வர்த்­த­மானி அறி­வித்­தலில் மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்­சி­மன்ற அமைச்சர் பைஸர் முஸ்­தபா இன்று மு.ப. 11 மணி­யி­ளவில் சைச்­சாத்­தி­ட­வுள்ளார்.

அவ்­வர்த்­த­மானி அறி­வித்­தலில், ஒவ்­வொரு உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளி­னதும் உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளன. அத்­துடன் இழ­பறி நிலை­யி­லி­ருந்த அம்­ப­க­முவ மற்றும் நுவ­ரெ­லியா உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்வு காணப்­பட்­டுள்­ளது. எனவே குறித்த உள்­ளூ­ராட்சி மன்­றங்­களை தலா மூன்று உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளாகப் பிரித்­துள்­ள­துடன் அதுவும் இன்­றைய வர்த்­த­மா­னியில் வெளி­யி­டப்­ப­ட­வுள்­ளது.

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் பதி­விக்­காலம் நிறை­வ­டைந்து இரு வரு­டங்கள் கடந்­துள்ள நிலை­யிலும் எல்லை நிர்­ணயப் பணி உள்­ளிட்ட கார­ணங்­களால் தேர்தல் நடத்­தப்­ப­ட­வில்லை. அது தொடர்பில் பல தரப்­பி­லி­ருந்தும் விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

இதே­வேளை பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தலை­மையில் கடந்த 24 ஆம் திகதி கட்சித் தலை­வர்கள் கூட்டம் நடை­பெற்­றது. அதன்­போது உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை விரை­வாக நடத்­து­மாறு கட்சித் தலை­வர்கள் வேண்­டிக்­கொண்­டனர். அதற்­கி­ணங்க எதிர்­வரும் ஜன­வரி மாதத்தில் தேர்­தலை நடத்­து­வ­தற்கும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

எனவே அத­னைத்­தொ­டர்ந்து மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்­தபா, உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான, உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர் எண்ணிக்கை குறித்த வர்த்தமானி அறிவித்தல் நவம்பர் மாதம் முதலாம் திகதி வெளியிடப்படும் எனத்தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply