பெறுபேறுகள் வெளியாவது தாமதித்துள்ளமைக்கான காரணம்

தேர்தல் பெறுபேறுகள் வெளியாவது தாமதித்துள்ளமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்தந்த மத்திய நிலையங்கள் மற்றும் வட்டார வாக்குகளை எண்ணும் பணி நிறைவடைந்து பெறுபேறுகள் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடமிருந்து தொலைநகல் மற்றும் தொலை பேசியினூடாக கிடைக்கப்பெற்றிருந்போதிலும் கையால் எடுத்து வரப்படும் பெறுபேறுகளை ஒப்பிட்டுப்பார்க்கவேண்டிய நிலை தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை ஒரு சில தெரிவித்தாட்சி அலுவலகர்களுக்கு தேர்தல் முடிவு அறிக்கையில் ஒரு அறிக்கை மாத்திரமே கிடைக்கப்பெற்றுள்ளதால் முழு தேர்தல் முடிவுகளை தயாரிப்பதில் மீண்டும் மீண்டும் பரீட்சிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த உள்ளூராட்சி மன்றங்களின் முடிவுகளை வெளியிடுவதில் குறிப்பிடத்தக்க அளவு நேரம் எடுக்கும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்து வட்டார பெறுபேறுகளை தெரிவத்தாட்சி அதிகாரியினால் தரவுக்கட்டமைப்பிற்குள் சேர்க்கும் வரையில் அந்த உள்ளூராட்சி மன்றத்தின் மொத்த பெறுபேறையும் ஊடகத்திற்கு அறிவிப்பதற்குரிய சூழ்நிலை இல்லை என்பதை தயவுடன் கவனத்தில் கொள்ளவும்.

பெறுபேறுகள் வெளியிடும் வரையில் பொறுமையாக இருக்குமாறு மிகவும் தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம் என்று தேர்தல் ஆணையாளர் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply