மஹியங்கனை – மாபகடவெவ பிரதேசத்தில் தாயும், மகளும் வெட்டிக்கொலை

தாயும் மகளும் கூரிய ஆயுதத்தால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவமொன்று மஹியங்கனை – மாபகடவெவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.இப் படுகொலைச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகொலை செய்யப்பட்ட இருபெண்களில் தாயின் வயது 59 எனவும் மகளின் வயது 40 எனவும் இருவரும் இகிரியகொட – மாபகடவெவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்களென பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிவந்துள்ளது.

இந்த இரட்டைக்கொலை தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படாத நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply