பிரேசில் கால்பந்து கிளப்பில் தீ விபத்து : 10 பேர் பலி

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் பிளமிங்கோ கால்பந்து கிளப் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள பயிற்சி மையத்தில் இன்று அதிகாலை சிலர் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, கால்பந்து கிளப்பில் திடீரென தீ பற்றியது. இது அனைத்து இடங்களுக்கும் பரவியது. இந்த தீ விபத்தில் சிக்கி சுமார் 10 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் சிலர் படுகாயம் அடைந்தனர். தீ விபத்தில் கிளப்பின் ஒரு பகுதி முழுவதும் சேதமானது.
தகவலறிந்து தீயணைப்பு வண்டிகள் அங்கு விரைந்து சென்றன. தீயை போராடி அணைத்தனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply