ஈரானின் மூன்று அணுஉலைகள் மீது தாக்குதல் : டிரம்ப்

Sunday, June 22nd, 2025 at 6:37 (SLT)

ஈரானின் மூன்று அணுஉலைகள் மீது அமெரிக்கா தாக்குதலை மேற்கொண்டதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். போர்டோ நட்டான்ஸ் இஸ்பஹான் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொண்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஈரானில் இருந்து இலங்கையர்களை வௌியேற்ற இந்தியா உதவிக்கரம்

Saturday, June 21st, 2025 at 13:08 (SLT)

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான இராணுவ சூழ்நிலை காரணமாக ஈரானில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கு உதவி வழங்க இந்தியா முன்வந்துள்ளது. இலங்கை அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட முறையான கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் இன்று (21) இந்த அறிக்கையை வெளியிட்டது.

மேலும் வாசிக்க >>>

இஸ்ரேலில் இருந்து எகிப்து வழியாக இலங்கை வருவோருக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

Saturday, June 21st, 2025 at 13:06 (SLT)

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் இருந்து எகிப்து வழியாக இலங்கைக்கு பயணிக்க விரும்பும் இலங்கையர்கள் செல்லுபடியாகும் இஸ்ரேலிய விசாவை வைத்திருப்பது கட்டாயமாகும் என்று இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

அரசாங்கம் எடுக்கும் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்க தயார்

Saturday, June 21st, 2025 at 13:03 (SLT)

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc Andre Franche உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) பிரதிநிதிகள் இடையே நேற்று (20) பாராளுமன்றத்தில் சந்திப்பொன்று நடைபெற்றது.

மேலும் வாசிக்க >>>

யாழில் நண்பனின் தாக்குதலுக்கு இலக்கானவர் உயிரிழப்பு

Saturday, June 21st, 2025 at 13:01 (SLT)

நண்பனின் தாக்குதலுக்கு இலக்காகி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வவுனிக்குளத்தை சேர்ந்த 56 வயதுடையவர் ஆவார்.

மேலும் வாசிக்க >>>

7 கிலோ ஹசீஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது

Saturday, June 21st, 2025 at 8:28 (SLT)

கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவலின்படி, மோதர லெல்லமா பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது 7 கிலோகிராம் ஹஷிஷுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

காட்டு யானை பிரச்சினை ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை

Saturday, June 21st, 2025 at 8:25 (SLT)

கிராமிய பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கைக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் காட்டு யானைகளின் பிரச்சினையை தீர்ப்பதற்கான முறையான பொறிமுறையை விரைவாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

மேலும் வாசிக்க >>>

செம்மணியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Saturday, June 21st, 2025 at 8:22 (SLT)

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும், உண்மை கண்டறியப்பட வேண்டும் எனக் கோரி, வடக்கு-கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் யாழ்ப்பாணம், செம்மணியில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

மேலும் வாசிக்க >>>

இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் எந்த நேரத்திலும் அந்நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வசதிகளை ஏற்பாடு செய்ய இலங்கை தயார்

Friday, June 20th, 2025 at 12:36 (SLT)

இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் எந்த நேரத்திலும் அந்நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வசதிகளை ஏற்பாடு செய்ய இலங்கை தயாராக இருப்பதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

85 சீனப் பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்

Friday, June 20th, 2025 at 12:32 (SLT)

இலங்கையில் தங்கியிருந்து இணையவழி மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 85 சீனப் பிரஜைகள் இன்று வெள்ளிக்கிழமை (20) அதிகாலை சீனாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

மேயர் தெரிவில் நிலைமையைக் கட்டுப்படுத்த அழைக்கப்பட்ட பொலிஸார்

Friday, June 20th, 2025 at 12:28 (SLT)

காலி மாநகர சபையின் முதல் கூட்டம் இன்று (20) உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது. காலி மாநகர சபையின் மேயரைத் தேர்ந்தெடுப்பதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதா? அல்லது பகிரங்க வாக்கெடுப்பு நடத்துவதா? என்பதை முடிவு செய்வதற்காக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், ரகசிய வாக்கெடுப்புக்கு ஆதரவாக 19 பேரும், பகிரங்க வாக்கெடுப்புக்கு ஆதரவாக 17 பேரும் வாக்களித்தனர்.

மேலும் வாசிக்க >>>

160 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

Friday, June 20th, 2025 at 7:47 (SLT)

யாழ்ப்பாணத்தில் 160 போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் நேற்று (19) பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். யாழ் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் போதைப் பொருள் குற்றத் தடுப்புப் பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் குழுவினரால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

பல அரசியல்வாதிகளின் கோடிக்கணக்கான சொத்துக்கள் குறித்த விசாரணை

Friday, June 20th, 2025 at 7:44 (SLT)

செல்வாக்கு மிக்க அமைச்சர்கள் பல அரசியல்வாதிகள் உட்பட 20க்கும் மேற்பட்ட நபர்களின் சொத்துக்கள் தொரர்பாக பொலிஸார் நிதி மோசடி புலனாய்வுப் பிரிவு விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

சர்ச்சைக்குரிய தடுப்பூசி தொடர்பில் ஆய்வக பரிசோதனையில் தெரியவந்த தகவல்

Thursday, June 19th, 2025 at 23:40 (SLT)

இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ‘தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி’ (Antibody Vaccines) தொடர்பான விசாரணையில், அவற்றில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாரிய வகை பற்றீரியாக்கள் மற்றும் உப்பு இருந்தமை ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஆய்வக பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம இன்று (19) நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

மேலும் வாசிக்க >>>

ஈரானில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவிப்பு

Thursday, June 19th, 2025 at 23:38 (SLT)

ஈரானில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக தெஹ்ரானில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக பின்வரும் முகவரிக்கு மாற்றப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது. 

மேலும் வாசிக்க >>>