தோல்வியின் பிதாவாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மாறியுள்ளார் : அமைச்சர் இராமலிங்கம்

Thursday, June 19th, 2025 at 10:39 (SLT)

தோல்வியின் பிதாவாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மாறியுள்ளார். அதேபோல இசைப்பிரியாவின் மரணம் உட்பட முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு காரணமானவர்களுடன் துணை நின்றவர்களுடன் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைக்கின்றது – என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

காங்கேசன்துறை – நாகை கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்

Thursday, June 19th, 2025 at 10:36 (SLT)

நாகை – இலங்கையின் காங்கேசன்துறை இடையே கடல் சீற்றம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கப்பல் சேவை நேற்று (18) மீண்டும் ஆரம்பமானதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. நாகை துறைமுகத்திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு கடந்த 2023 ஒக்டோபா் முதல் பயணிகள் கப்பல் இயக்கப்பட்டு வருகிறது. சுபம் என்ற தனியாா் நிறுவனம் மூலம் ‘சிவகங்கை’ பயணிகள் கப்பல் சனிக்கிழமைகளை தவிர ஏனைய நாள்களில் இயக்கப்பட்டு வருகிறது.

மேலும் வாசிக்க >>>

53 நாடுகளில் வழங்கப்படும் விவாகரத்து உள்ளிட்ட கடன் வழங்கல் மற்றும் பெறுதல் பிணக்கு தொடர்பான தீர்ப்புகள் இலங்கையில் செல்லுபடியாகும் : நீதி அமைச்சர்

Thursday, June 19th, 2025 at 10:34 (SLT)

வெளிநாடுகளில் வழங்கப்படும் விவாகரத்து தீர்ப்புகள் மற்றும் கடன் வழங்கல் மற்றும் பெறுதல் பிணக்கு தொடர்பான தீர்ப்புகளை இலங்கையில் அங்கீகரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இச்சட்டத்தில் 53 நாடுகளில் வழங்கப்படும் தீர்ப்புகள் இலங்கையில் செல்லுபடியாகும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

16 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வாரம்

Thursday, June 19th, 2025 at 10:31 (SLT)

எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் ஜூலை 5 ஆம் திகதி வரை 16 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக நுளம்புகளின் பரவல் அதிகரித்துள்ளதால், அதைக் கட்டுப்படுத்த இந்த டெங்கு ஒழிப்பு வாரத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் ஆலோசகரும், சமூக வைத்திய நிபுணருமான பிரஷிலா சமரவீர தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

Wednesday, June 18th, 2025 at 11:36 (SLT)

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க தேசிய மக்கள் சக்திக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸூம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸூக்கு தேசிய மக்கள் சக்தியும் ஒருமித்த ஆதரவை வழங்கியுள்ளது என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கேன்களில் எரிபொருள் விநியோகிப்பதற்கு தடை

Wednesday, June 18th, 2025 at 11:31 (SLT)

பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருளைப் பெறுவதற்காக நுகர்வோர் தன்னிச்சையாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கூடி, தேவையற்ற நெரிசல் மற்றும் வரிசைகளை உருவாக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டுகிறது.

மேலும் வாசிக்க >>>

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனுவை பரிசீலிக்க திகதியிடப்பட்டுள்ளது

Wednesday, June 18th, 2025 at 11:29 (SLT)

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 23 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

கரடியனாறு பதுளை வீதியில் நித்திரை செய்தவர்கள் மீது வாகனம் ஏறியதில் இளைஞன் ஒருவர் பலி

Wednesday, June 18th, 2025 at 11:27 (SLT)

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பதுளை வீதியிலுள்ள தும்பாஞ்சோலை பகுதியில் வீதியில் நித்திரரை செய்த ஒருவர் மீது வாகன ஏறியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்ததுடன் அவருக்கு அருகில் நித்திரை செய்தவர் தெய்வாதீனமாக உயிர் தப்பிய சம்பவம் செவ்வாய்க்கிழமை (17) அதிகாலையில் இடம்பெற்றதுடன் இளைஞன் மீது ஏற்றிய வாகனம் தப்பி ஓடியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

பெண்களின் தொழில்முறை சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும் : ஹரினி அமரசூரிய

Wednesday, June 18th, 2025 at 9:15 (SLT)

சிறுவர் பாதுகாப்பு எந்த வகையிலும் பெண்களுக்கு மட்டுமே உரிய பொறுப்பல்ல என்றும், குழந்தைகளை பராமரிப்பது வெறும் பெண்களின் பொறுப்பாக கருதாமல் பெண்களின் தொழில்முறை சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது மிகவும் சரியான கருத்து என்றும் அதேநேரத்தில் அது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமான விடயம் என்றும் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்துகிறார்.

மேலும் வாசிக்க >>>

கோர விபத்து சம்பவ இடத்திலேயே பலியான வைத்தியர்

Wednesday, June 18th, 2025 at 9:11 (SLT)

திருகோணமலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து திருகோணமலை – சேருநுவர காவல் பிரிவிலுள்ள தங்கநகர் பகுதியில் நேற்று (17) செவ்வாய்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

வீட்டில் மயங்கி விழுந்த இளைஞர் உயிரிழப்பு

Wednesday, June 18th, 2025 at 7:46 (SLT)

வீட்டில் மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது இளைஞர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர் கந்தர்மடத்தைச் சேர்ந்த கேதீஸ்வரன் (வயது-20) என்ற இளைஞர் ஆவார்.

மேலும் வாசிக்க >>>

தண்டவாளத்தில் இருந்த இளைஞர் ரயில் மோதியதால் உயிரிழப்பு

Wednesday, June 18th, 2025 at 7:42 (SLT)

அரியாலை புங்கங்குளம் புகையிரத தண்டவாளத்தில் இருந்த இளைஞர் ஒருவர் புகையிரதம் மோதியலில் உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவர் கேணியடி அரியாலையைச் சேர்ந்த தலையசிங்கம் சுதாகரன் (வயது-20) என்ற இளைஞராக ஆவார்.

மேலும் வாசிக்க >>>

ஈரானின் அணுஉலைகள் மீதான தாக்குதல்கள் : இஸ்ரேலுடன் இணைகின்றது அமெரிக்கா

Wednesday, June 18th, 2025 at 7:37 (SLT)

ஈரானின் அணுஉலைகள் மீதான தாக்குதல்களில் இஸ்ரேலுடன் இணைந்துகொள்வதற்கு அமெரிக்கா தயராகின்றது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இது குறித்து ஆராய்ந்து வருகின்றார் என சர்வதே ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் வாசிக்க >>>

பிரதமரை சந்தித்தார் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர்

Tuesday, June 17th, 2025 at 9:44 (SLT)

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் பிரதமர் ஹரிணி அமர் சூரியவை நேற்று அலரி மாளிகையில் சந்திதுள்ளார்.பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட பின்னர் பொருளாதாரம் மீட்சிப் பாதையில் செல்லும்போது, சர்வதேச பங்குதாரர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கான இலங்கையின் வலுவான உறுதிப்பாட்டை பிரதமர் இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பொருளாதாரத்தை மீட்டெடுக்க, புதிய மறுசீரமைப்புகளும் மாற்றங்களும் அவசியம் : அநுரகுமார திசாநாயக்க

Tuesday, June 17th, 2025 at 9:41 (SLT)

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை நாட்டில் உருவாக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>