இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த தமிழ் முற்போக்கு கூட்டணியினர்

Wednesday, June 11th, 2025 at 11:30 (SLT)

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பழனி திகாம்பரம் மற்றும் வே. இராதாகிருஷ்ணன் ஆகியோரே இந்திய உயர் ஸ்தானிகரை சந்தித்திருந்தனர்.

மேலும் வாசிக்க >>>

ஆஸ்திரியாவில் துணிகரம்: பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலி

Tuesday, June 10th, 2025 at 19:29 (SLT)

ஆஸ்திரியாவின் கிராஸ் நகரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் இன்று துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவத்தில் குறைந்தது பத்து பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

வடக்கு பாடசாலைகளில் முறைப்பாட்டுப்பெட்டிகள்: நா.வேதநாயகன்

Tuesday, June 10th, 2025 at 12:13 (SLT)

பாடசாலைகளில் நடைபெறுகின்ற பிரச்சினைகளை மூடிமறைக்கும் வகையில் பாடசாலைகள் செயற்படக்கூடாது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். சிறுவர்களின் நலன்சார் செயற்பாடுகளில் பங்கேற்கும் சகல உத்தியோகத்தர்களும் வழிகாட்டுதல் கலந்துரையாடல் வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது, அதில் வளவாளராக பங்குபற்றி கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

ரெலோவை எச்சரித்துள்ள சி.வி.கே.சிவஞானம்

Tuesday, June 10th, 2025 at 12:10 (SLT)

உள்ளூராட்சி சபைகளில் நிர்வாகங்களை அமைப்பது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ரெலோ உட்பட்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி எவ்வாறு நடந்து கொள்கின்றதோ வன்னி தேர்தல் மாவட்டத்தில் அதே பதில் முறைமையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் நடந்து கொள்ளும் என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் ரெலோ தலைவரிடம் உறுதிபடத் தெரிவித்துள்ளாராம் உள்ளூராட்சி சபைகளில் நிர்வாகங்களை அமைப்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும், அதன் ஊடகப் பேச்சாளர் சுரேன் குருசாமியும் யாழ். நல்லூரில் சி.வி.கே. சிவஞானத்தின் இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.

மேலும் வாசிக்க >>>

சிங்கள மக்களுக்கு வந்தால் இரத்தம்! தமிழ் மக்களுக்கு வந்தால் தக்காளி சட்னி : கஜேந்திரன்

Tuesday, June 10th, 2025 at 12:06 (SLT)

இனவாதத்தை களைந்து மதவாதத்தை களைந்து சட்டத்தின் ஆட்சியை அனுர அரசாங்கம் கொண்டு வரப்போகிறார்கள் ஏனென்றால் அந்த நம்பிக்கை தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும். சட்ட விரோதமான முறையில் அமைக்கப்பட்ட தையிட்டி திஸ்ஸ விகாரை அகற்றப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி பொதுமன்னிப்பு விவகாரம்- இந்த அரசாங்கம் ‘எல் போர்ட்’ என்று ரணில் குறிப்பிட்ட கருத்து உண்மையாகியுள்ளது : தயாசிறி ஜயசேகர 

Tuesday, June 10th, 2025 at 12:03 (SLT)

கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதிலும் முறைகேடு இடம்பெறுவதை தவிர்த்துக் கொள்ள முடியாத அளவுக்கு இந்த அரசாங்கத்தின் செயற்திறன் காணப்படுகிறது. இந்த அரசாங்கம் ‘எப் போர்ட்’ என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்ட கருத்து இன்று உண்மையாகியுள்ளது. இவர்கள் வாய்ச்சொல் வீரர்களே தவிர செயல் வீரர்களல்ல என்று புதிய ஜனநாயக முன்னணியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

மட்டக்களப்பில் கோர விபத்து தலைகீழாக கவிழ்ந்த வேன்

Tuesday, June 10th, 2025 at 12:00 (SLT)

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – தியாவட்டவான் பிரதான வீதியில் வேன் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

ஓய்வு பெற்ற 10,000 இராணுவ வீரர்களை பொலிஸ் சேவையில் இணைக்க அரசாங்கம் முடிவு:ஆனந்த விஜேபால

Monday, June 9th, 2025 at 10:52 (SLT)

45 வயதுக்குட்பட்ட 10,000 பேரை, இராணுவத்தில் இருந்து சட்டப்பூர்வமாக ஓய்வு பெற்றவர்களை, பொலிஸ் சேவையில் இணைக்கும் திட்டத்தை பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

அனுராதபுரம் சிறைச்சாலை அதிகாரி கைது

Monday, June 9th, 2025 at 10:46 (SLT)

அனுராதபுரம் சிறைச்சாலையின் பிரதி ஆணையாளர் 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி பொது மன்னிப்பை சட்டவிரோதமாகப் பயன்படுத்தியது தொடர்பான விசாரணை தொடர்பாக குறித்த கைது மேற்கொள்ளப்பட்டது.

மேலும் வாசிக்க >>>

பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை

Monday, June 9th, 2025 at 10:39 (SLT)

குளியாப்பிட்டிய – வல்பிடகம பிரதேசத்தில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 44 வயதுடைய வடுமுன்னேகெதர பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கொழும்பு மாநகர சபை உட்பட ஏனைய மாநகர சபைகளில் பொது இணக்கப்பாட்டுடன் ஆட்சியமைப்போம் : ஐக்கிய மக்கள் சக்தி

Monday, June 9th, 2025 at 10:35 (SLT)

எதிர்க்கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பொது இணக்கப்பாட்டுடன் கொழும்பு மாநகர சபை உட்பட ஏனைய மாநகர சபைகளில் ஆட்சியமைப்போம். மக்களாணையை விளங்கிக் கொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

பொசன் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 3,500 பொலிஸ் அதிகாரிகள் கடமையில்

Monday, June 9th, 2025 at 7:43 (SLT)

பொசன்பண்டிகையை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை (9) முதல் அனுராதபுரம், மிஹிந்தலை மற்றும் அதனை அண்மித்துள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 3,500 பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 23,000ஐ கடந்தது

Sunday, June 8th, 2025 at 0:29 (SLT)

இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் நாட்டில் மொத்தமாக 23,744 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தரவுகள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க >>>

சோனியா காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு சிம்லா மருத்துவமனையில்

Sunday, June 8th, 2025 at 0:20 (SLT)

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்ட நிலையில் அவர் நலமாகி வீடு திரும்பி உள்ளார்.


அரசுக்கு ஆதரவான நிறுவனமாக மாற்றப்பட்ட சிஐடி: தயாசிறி குற்றச்சாட்டு

Sunday, June 8th, 2025 at 0:09 (SLT)

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் அளிக்க வந்த நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர, சுமார் 4 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>