கடந்த 24 மணிநேரத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்தடை குறித்த முறைப்பாடுகள்

Saturday, May 31st, 2025 at 7:50 (SLT)

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்தடை தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

உகந்தை முருகன் ஆலயப் பகுதியில் நிறுவப்பட்ட புத்தர் சிலையால் சர்ச்சை

Friday, May 30th, 2025 at 11:31 (SLT)

அம்பாறை மாவட்டத்தின் லாகுகல பிரதேச செயலாளர் பிரிவின் தெற்கு எல்லையில், தமிழர்களின் புராதன வரலாறு மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம் கொண்ட உகந்தை முருகன் ஆலயப் புனிதப் பிரதேசத்தில், அப்பகுதியில் அமைந்துள்ள ஒரு மலையில் கடற்படையினரால் திடீரென நிறுவப்பட்ட புத்தர் சிலை தொடர்பாக பல்வேறு எதிர்மறையான கருத்துகள் மற்றும் தகவல்கள் ஊடகங்கள் வாயிலாக வெளியாகியுள்ளன.

மேலும் வாசிக்க >>>

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

Friday, May 30th, 2025 at 11:28 (SLT)

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 17 வயது சிறுவன் ஒருவன் சாரதி அனுமதி பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிள் ஓட்டியமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருக்க 10,000 ரூபாய் இலஞ்சமாக கோரியதாக அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

பயங்கரவாத சட்டங்கள் விடயத்தில் மக்கள் ஆணையை மீறி செயட்படுகிறது

Friday, May 30th, 2025 at 11:26 (SLT)

தற்போதுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வதைத் தவிர, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒன்றைப் பிறப்பிக்க ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எந்தவித மக்கள் ஆணையும் கிடையாது என தேசிய ஷூரா சபை சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

சீன வர்த்தக அலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதியை சந்தித்தார்

Friday, May 30th, 2025 at 11:21 (SLT)

தற்போதைய அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையான வேலைத்திட்டத்தை கருத்திற் கொண்டு இலங்கையில் முதலீடு செய்வதற்கு சீன முதலீட்டாளர்கள் கவனம்

மேலும் வாசிக்க >>>

பலத்த காற்றால் மரங்கள் விழுந்து சேதம் கொழும்பில் பாதிப்பு

Friday, May 30th, 2025 at 11:17 (SLT)

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று (29) இரவு வீசிய பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு – காலி வீதியில் கொள்ளுப்பிட்டியிலிருந்து வெள்ளவத்தை வரையிலும், கிரேண்ட்பாஸ் பகுதியை சுற்றியுள்ள பல பகுதிகளிலும் மரங்கள் விழுந்து கிடப்பதைக் காணமுடிகிறது.

மேலும் வாசிக்க >>>

ஆட்டோவிலிருந்து சிறுவனை தள்ளிவிட்டு கொன்றவருக்கு மரண தண்டனை விதிப்பு

Friday, May 30th, 2025 at 11:04 (SLT)

முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த 16 வயதுடைய சிறுவனை, முச்சக்கரவண்டியிருந்து தள்ளிவிட்டு கொலை செய்த சம்பவத்தில், குற்றவாளி என இனங்காணப்பட்ட நபருக்கு பதுளை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு PTAவுக்கு மாற்றீடாக மற்றுமொரு சட்டம் அவசியம்

Thursday, May 29th, 2025 at 22:27 (SLT)

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் ஆனால் வெளிநாட்டு அச்சுறுத்தல்களில் இருந்து தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மற்றுமொரு சட்டம் அவசியம் என நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்களை கொண்டு செல்ல முயன்ற சிறைச்சாலை அதிகாரி கைது

Thursday, May 29th, 2025 at 22:23 (SLT)

கொழும்பு மெகசீன் சிறைச்சாலைக்குள் போதைப்பொருட்களை கொண்டு செல்ல முயன்ற சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொறள்ளை பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரான சிறைச்சாலை அதிகாரி மெகசீன் சிறைச்சாலைக்கு சென்றிருந்த போது சிறைச்சாலை அதிகாரிகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மஹிந்தானந்த மற்றும் நளின் பெர்னாண்டோவுக்கு கடூழிய சிறை

Thursday, May 29th, 2025 at 15:02 (SLT)

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குறித்த இருவரும் குற்றவாளிகள் என மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

நாடு முழுவதும் PCR பரிசோதனைகள் அதிகரிப்பு

Thursday, May 29th, 2025 at 14:59 (SLT)

கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவுகிறதா என்பதைக் கண்டறிய நாடு முழுவதும் PCR பரிசோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்களின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

மாலினி பொன்சேகாவுக்கு அரச மரியாதைக்கு பதிலாக அவமானமே மிஞ்சியது: ரோஹிணி எம்.பி.

Thursday, May 29th, 2025 at 10:11 (SLT)

இலங்கையின் சிங்கள சினிமாவின் பிரபல நடிகையான மாலினி பொன்சேகாவுக்காக தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படவில்லை.அவரது வாழ்க்கையின் கடைசி சில மாதங்களில் அரசாங்கத்திடமிருந்து அவமானங்களை மட்டுமே பெற்றதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன கவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பஸ்ஸின் மிதி பலகையில் இருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழப்பு

Thursday, May 29th, 2025 at 10:05 (SLT)

பஸ்ஸின் மிதி பலகையில் இருந்து தவறி விழுந்த நிலையில், வைத்தியசாலை சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் புலோப்பளை, பளையைச் சேர்ந்த அன்ரனி அருள்தாஸ் நிதுராஜ் (வயது 26) என்ற இளைஞராவார்.

மேலும் வாசிக்க >>>

ட்ரம்பின் வரி விதிப்புக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

Thursday, May 29th, 2025 at 10:03 (SLT)

டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்புக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ட்ரம்ப் அதிகாரத்தை மீறி செயல்படுவதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ‘டாஜ்’ என்ற துறையில் இருந்து விலகுவதாக தொழிலதிபர் எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

அபிவிருத்தி தொடர்பான மதிப்பீட்டை மேற்கொள்வது மிகவும் முக்கியமானது:பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய

Thursday, May 29th, 2025 at 10:00 (SLT)

நிர்வாகம், பொறுப்புக்கூறல் மற்றும் கொள்கை தயாரிப்பில் மதிப்பீட்டின் முக்கியத்துவம் மேலோங்கப்படுவது ஒரு சாதகமான நகர்வாகும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>