கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்:பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர

Thursday, May 29th, 2025 at 9:57 (SLT)

மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 மாதங்களில் வீதி விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இது மிகவும் கவலையானது இருந்த போதும் போக்குவரத்தை துப்பரவு செய்யப்பட வேண்டும், எனவே மாவட்டத்தில் வீதி நடைபாதையை ஆக்கிரமித்துள்ள வர்த்தகர்களை உடனடியாக அகற்றவேண்டும், அதேபோல் மோட்டார் சைக்கிளில் தலைகவசம் இல்லாது பயணிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர கட்டளை பிறப்பித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

தொழிலதிபர் கடத்தப்பட்டு, அடித்து கொல்லப்பட்டு, எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு

Wednesday, May 28th, 2025 at 22:30 (SLT)

தோல் பொருட்கள் தொழிலதிபர் ஒருவர் கடத்தப்பட்டு, அடித்து கொல்லப்பட்டு, புளத்சிங்கள-நாகஹதொல துணைப் பாதையில் எரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதாக புளத்சிங்கள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

இலங்கையில் மீண்டும் PCR பரிசோதனை

Wednesday, May 28th, 2025 at 22:26 (SLT)

புதிய கொவிட்-19 திரிபால் ஏற்படும் உலகளாவிய அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, சுகாதார அமைச்சகம் சில மருத்துவமனைகளில் PCR பரிசோதனையை அதிகரித்துள்ளது. மேலும், PCR பரிசோதனை வசதிகளைக் கொண்ட மருத்துவமனைகள், தற்போது கொவிட் -19 நோயாளிகளைக் கண்டறிய அதிக எச்சரிக்கையுடன் உள்ளதாக புதன்கிழமை (28) அன்று சுகாதார அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

வீதியில் ஆண் ஒருவரின் சடலம் மோட்டார் சைக்கிளுடன் மீட்பு

Wednesday, May 28th, 2025 at 22:21 (SLT)

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள திக்கோடை சந்தி அருகாமையில் உள்ள வீதியின் மதகு ஒன்றிற்கு அருகில் 38 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் இன்று (28) புதன்கிழமை காலையில் மீட்டதுடன் மோட்டர் சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

முன்னேற்றத்திற்காக வைக்கப்பட்ட அடியை, திசை திருப்ப ஒருபோதும் இடமளியோம் : ஜனாதிபதி

Wednesday, May 28th, 2025 at 14:37 (SLT)

சமூக முன்னேற்றத்திற்காக வைக்கப்பட்ட அடியை திசை திருப்ப ஒருபோதும் இடமளியோம். என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.  தமது உத்தியோகபூர்வ X  தளத்தில்  அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்


வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கை

Wednesday, May 28th, 2025 at 14:32 (SLT)

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அறிவித்தலை விடுத்துள்ளது. சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக ஹம்பாந்தோட்டை வரையிலும் உள்ள கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை இன்று (28) பிற்பகல் 12.30 மணி முதல் நாளை (29) பிற்பகல் 12.30 மணி வரை செல்லுபடியாகும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

450 கிலோ கிராம் போதைப்பொருள் மீட்பு

Wednesday, May 28th, 2025 at 14:29 (SLT)

தெற்கு கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில் நேற்று (27) கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட இரண்டு நெடுநாள் மீன்பிடி படகுகளில் இருந்து 450 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஏற்றுமதித் தொழில்துறையின் சவால்கள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்

Wednesday, May 28th, 2025 at 14:26 (SLT)

ஏற்றுமதித் துறையில் உள்ள சவால்களை வெற்றிகொள்ள நீண்ட கால கைத்தொழில் அபிவிருத்தித் திட்டம் குறித்து அவதானம் ஏற்றுமதித் தொழில்துறையின் சவால்கள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

மேலும் வாசிக்க >>>

விபத்தில் உயிரிழந்த யாழ் இந்திய துணைத் தூதரக அதிகாரிக்கு டக்ளஸ் அஞ்சலி

Wednesday, May 28th, 2025 at 14:23 (SLT)

யாழ் இந்திய துணைத் தூதரக (Consulate General of India) உள்ளூர் கலாசார உத்தியோகத்தர் பிரம்மஸ்ரீ பிரபாகரசர்மா சச்சிதானந்தக் குருக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

உலகெங்கிலும் மீண்டும் கொரோனா தாண்டவம் தீவிர கண்காணிப்பில் இலங்கை விமான நிலையங்கள்

Wednesday, May 28th, 2025 at 8:57 (SLT)

உலகெங்கிலும் பல நாடுகளில் மீண்டும் பரவி வரும் புதிய கொவிட் வைரஸ் குறித்து தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற அமைச்சர்,

மேலும் வாசிக்க >>>

எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த நியூசிலாந்து உயர்மட்டக் தூதுக் குழு

Wednesday, May 28th, 2025 at 8:47 (SLT)

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து பிரதிப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான வின்சென்ட் பீட்டர்ஸுக்கும் (Vinston Peters) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (27) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

மேலும் வாசிக்க >>>

பாடசாலைகளுக்குள் இடம்பெறும் சித்திரவதைகளுக்கு இனி இடமில்லை

Wednesday, May 28th, 2025 at 8:45 (SLT)

பாடசாலைகளுக்குள் பிள்ளைகள் முகம்கொடுக்கும் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், பாடசாலை மாணவர்களுக்கு எதிரான சித்திரவதைகளுக்கு இனியும் இடமளிக்கக்கூடாதெனவும், அவ்வாறான சம்பவமொன்று இடம்பெறுமாயின் உடனடியாக அதிபர்கள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

வீதி விபத்துக்களில் 06 பேர் பலி

Wednesday, May 28th, 2025 at 8:43 (SLT)

நாட்டில் நேற்று (27) வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 06 பேர் உயிரிழந்தனர். இரத்தினபுரி – பாணந்துறை பிரதான வீதியில் இடங்கொட பகுதியில் நேற்று (27) மாலை பாணந்துறை திசையிலிருந்து இரத்தினபுரி திசை நோக்கிச் சென்ற இரும்பு கட்டிலுடன் பொருட்களை ஏற்றிச் சென்ற கெப் வண்டி மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் வாசிக்க >>>

உலகெங்கிலும் பரவி வரும் புதிய கொவிட் வைரஸ் குறித்து இலங்கை அவதானம்

Tuesday, May 27th, 2025 at 17:28 (SLT)

உலகெங்கிலும் பல நாடுகளில் மீண்டும் பரவி வரும் புதிய கொவிட் வைரஸ் குறித்து தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

அரச சேவையில் 15,073 வெற்றிடங்கள் : ஆட்சேர்ப்புக்கு அனுமதி

Tuesday, May 27th, 2025 at 17:26 (SLT)

அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும் வாசிக்க >>>