பட்டலந்த விவகாரம் தொடர்பாக அறிக்கையை சமர்பித்து அது தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் : குமார் குணரத்னம்

Tuesday, March 11th, 2025 at 8:41 (SLT)

தற்போதைய அரசாங்கம் பட்டலந்த விவகாரம் தொடர்பான அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதுடன் அது தொடர்பில் உரிய தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோன்று சம்பவம் மீண்டும் இந்த நாட்டில் இடம்பெறாமல் இருக்க சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரதம செயலாளர் குமார் குணரத்னம் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

தெற்கின் பிள்ளைகளைப் போல வடகிழக்கின் பிள்ளைகளும் தரமான, சமத்துவமான, சிறப்பான கல்வியை பெறுவதை இவ்வாண்டிலிந்தே உறுதிப்படுத்துக : துரைராசா ரவிகரன்

Tuesday, March 11th, 2025 at 8:37 (SLT)

கல்விக்கான முதலீடு செலவல்ல, அது எதிர்காலத்திற்கான முதலீடு கல்விக்கான ஒதுக்கீடுகளை சமத்துவ அடிப்படையில் மேற்கொண்டு, தெற்கின் பிள்ளைகளைப் போல வடகிழக்கின் பிள்ளைகளும் தரமான, சமத்துவமான, சிறப்பான கல்வியை பெறுவதை இவ்வாண்டிலிந்தே உறுதிப்படுத்துமாறும் இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கல்வி அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

மேலும் வாசிக்க >>>

ஒழுநெறியுள்ள நாட்டைக் கட்டியெழுப்புவதில் மகா சங்கத்தினர் உட்பட மதஸ்தலங்கள் தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளது : ஜனாதிபதி

Tuesday, March 11th, 2025 at 8:34 (SLT)

இலங்கை அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்க தேரர் பதவிபெற்ற பலாங்கொடை ஸ்ரீ தர்மானந்த வித்யாயதன பிரிவேனாவின் பீடாதிபதியும், ராஸ்ஸகல விகாரையின் மகாநாயக்க தேரருமான வண, கரகொட உயங்கொட மைத்ரிமூர்த்தி தேரருக்கு சன்னஸ் பத்திரத்தை வழங்கும் அரச விழா திங்கட்கிழமை (10) பிற்பகல் கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

மேலும் வாசிக்க >>>

அநுர அமைச்சர்களுடன் வாதிடுவது முட்டாள்தனமானது:இரா.சாணக்கியன்

Monday, March 10th, 2025 at 10:27 (SLT)

ஆளும் தரப்பிடம் முக்கிய விடயமொன்றினை பற்றி விசாரணை செய்து தெளிவுபடுத்துமாறு கேரிக்கை விடுத்திருந்ததாகவும், எனினும், பாதுகாப்பு அமைச்சர் பதில் வழங்காது சென்றுவிட்டதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்

மேலும் வாசிக்க >>>

யாழிலிருந்து நாடுகடத்தப்பட்டுள்ள 15 வெளிநாட்டவர்கள்

Monday, March 10th, 2025 at 10:25 (SLT)

இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு விதிமுறைகளை மீறி சுற்றுலா விசாக்களின் கீழ் நாட்டிற்கு வருகைதந்துள்ள 15 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.குறித்த அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தால் இலவசமாக வழங்கப்பட்ட சுற்றுலா விசாக்களின் கீழ் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் எனவும், யாழில் மதப் பிரசாரப் பணியிலும் தளபாடங்களில் சிற்ப வேலைப்பாடு செய்யும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

அனைத்து ஆண்களுக்கும் கட்டாய இராணுவ பயிற்சி

Monday, March 10th, 2025 at 10:23 (SLT)

போலந்தில் அனைத்து ஆண்களையும் இராணுவ பயிற்சிக்கு உட்படுத்தும் வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருவதாக அந் நாட்டின் பிரதமர் டொனால்ட் டஸ்க் (Donald Tusk) தெரிவித்துள்ளார். போலந்து நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அனைத்து வயது வந்த போலந்து ஆண்களுக்கும் கட்டாய இராணுவ பயிற்சி அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இரு வேறு இடங்களில் பதிவான கோர விபத்து : ஐவர் உயிரிழப்பு

Monday, March 10th, 2025 at 10:19 (SLT)

மாதம்பே – கலஹிடியாவ பகுதியில் முச்சக்கர வண்டியும் பேருந்தும் மோதிய விபத்தில் ஒரு வயது குழந்தை உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர். விபத்து நடந்த நேரத்தில் முச்சக்கர வண்டியில் ஓட்டுநர் உட்பட ஒன்பது பேர் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

ஜேர்மனியின் அனைத்து விமான நிலையங்களும் இன்று முடங்கும் அபாயம்

Monday, March 10th, 2025 at 10:15 (SLT)

ஜேர்மனியின் பிராங்பேர்ட், மியூனிக் மற்றும் பெர்லின் உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களும் நாளை முடங்கும் அபாயம் காணப்படுவதாக அந்நாட்டு ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இன்று திங்கட்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமாறு தொழிலாளர் சங்கமான Ver.di, தரைவழி பணியாளர்கள், பொருட்களை கையாளுபவர்கள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் வாசிக்க >>>

கட்டுநாயக்கவில் போதைப்பொருளுடன் சிக்கிய கனேடிய யுவதி

Monday, March 10th, 2025 at 10:10 (SLT)

17.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹஷிஷ் போதைப்பொருளை கடத்த முயற்சித்த 20 வயது கனேடிய பெண் ஒருவர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் நேற்று இரவு (9) விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர், இளங்கலை மாணவி என்றும் அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட முதல் சந்தர்ப்பம் இதுவென்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

செவ்வந்திக்கு பின்னால் இயங்கும் பெருமளவு பாதாள உலகக் கும்பல் தலைவர்கள்

Monday, March 10th, 2025 at 10:08 (SLT)

பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டதாக கருதப்படும் இஷார செவ்வந்தியுடன் ஏராளமான பாதாள உலகக் கும்பல் தலைவர்கள் தொடர்பு இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக 6 பொலிஸ் குழுக்கள் நியமனம்

Monday, March 10th, 2025 at 10:06 (SLT)

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக 6 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அது தொடர்புடைய விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்

Monday, March 10th, 2025 at 10:03 (SLT)

இன்று நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி , வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேலும் வாசிக்க >>>

பாம்பன் மீனவர்களின் வேலை நிறுத்தம்

Monday, March 10th, 2025 at 10:01 (SLT)

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பன் விசைப்படகு மீனவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இராமேசுவரம் அருகே பாம்பன் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஆரோக்கியம் என்பவரது விசைப்படகை இலங்கை கடற்படையினர் கைப்பற்றி படகிலிருந்த ஆரோக்கியம், செல்வம், ஜெயாஸ்டன், ஜோஸ்வா, சீமோன், முத்துராமன், முகிலன், ஆரோக்கியம், வால்டன், மாரிசெல்வம், ஜெயசூர்யா, ரிபாக்சன், தர்மன், விக்னேஸ்வரன் ஆகிய 14 மீனவர்களை கடந்த வியாழக்கி ழமை இரவு கைது செய்தனர்.

மேலும் வாசிக்க >>>

போதைப் பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்த மகனுக்கு ஹெரோயின் வழங்க முற்பட்டதாக தந்தையான உப பொலிஸ் பரிசோதகர் கைது

Monday, March 10th, 2025 at 9:41 (SLT)

வவுனியா, பூந்தோட்டம் போதைப் பொருள் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வரும் தனது மகனுக்கு ஹெரோயின் போதைப் பொருள் வழங்க முற்பட்டதாக உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கனடாவின் அடுத்த பிரதமராக மார்க் கார்னே தெரிவு

Monday, March 10th, 2025 at 9:37 (SLT)

கனடாவினதும் அந்த நாட்டின் லிபரல் கட்சியினதும் தலைவராவதற்கான போட்டியில் மார்க்கார்னே வெற்றிபெற்றுள்ளார். அடுத்த சில நாட்களில் இவர் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார்அனைவருக்கும் வலுவான கனடாவை கட்டியெழுப்பும் ஒரேநோக்கத்துடன் நான் இரவுபகலும் பாடுபடுவேன் என பொருளாதார நிபுணரும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநருமான மார்க் கார்னே தனது வெற்றி உரையில் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>