இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விவசாயிகளிடம் ஒப்படைத்தால் நெல்லுக்கான பஞ்சம் இல்லாமல் போகும் : செல்வம் அடைக்கலநாதன்

Thursday, March 13th, 2025 at 6:56 (SLT)

வடக்கில் விவசாய நிலங்கள் பல இராணுவம் உள்ளிட்ட முப்படையினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. படையினர் அதில் விவசாயம் செய்கின்றனர். இந்தக் காணிகளை விவசாயிகளிடம் ஒப்படைத்தால் நெல்லுக்கான பஞ்சம் இல்லாமல் போகும் .விவசாயிகள் வசதியானவர்கள் அல்ல. இவர்கள் பொருளாதார பிரச்சினையில் சொல்லொன்னா துன்பங்களை அனுபவிக்கின்றனர். அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

இந்தியாவில் இருந்து ஆசிரியர்களை அழைத்துவர வேண்டும் என நான் தெரிவித்ததாக தெரிவிக்கப்படும் செய்தியில் உண்மையில்லை : இராதாகிருஷ்ணன்

Thursday, March 13th, 2025 at 6:21 (SLT)

இந்திய பட்டதாரி ஆசிரியர்களை நாட்டுக்கு அழைத்துவர வேண்டும் என நான் அரசாங்கத்திடம் கோரியதாக ஆங்கில பத்திரிகை ஒன்று மற்றும் இணையத்தலங்ளில் வெளிவந்துள்ள செய்தியில் உண்மை இல்லை என வே, இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

ஐக்கிய மக்கள் சக்தி இணங்கினால் சுயாதீன சின்னமொன்றில் களமிறங்கலாம் : வஜிர அபேவர்தன

Thursday, March 13th, 2025 at 6:17 (SLT)

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கிடையிலான இணக்கப்பாட்டுடன் சுயாதீன சின்னமொன்றில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் களமிறங்க முடியும். அந்த தீர்மானத்தை எட்டுவதற்கு 15ஆம் திகதி வரை எவ்வித தடையும் இல்லை. அவ்வாறில்லை எனில் யானை சின்னத்தில் தனித்து களமிறங்குவோம் என ஐ.தே.க. தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான செயற்திறன்மிக்க பொறிமுறையைக் கட்டியெழுப்புங்கள் : அலி சப்ரி

Thursday, March 13th, 2025 at 6:11 (SLT)

அநுராதபுரம் போதனா வைத்தியசாலை சம்பவம் வீடுகளிலும், பொது இடங்களிலும், பணியிடங்களிலும் பெண்களின் பாதுகாப்பினை உடனடியாக உறுதிப்படுத்தவேண்டியதன் அவசியத்தை நினைவுறுத்துகிறது. அதற்கமைய பெண்களைப் பாதுகாப்பதற்கும், குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறச்செய்வதற்கும், பெண்கள் பாதுகாப்பாக உணரக்கூடிய சூழலைக் கட்டியெழுப்புவதற்கும் ஏதுவான செயற்திறன்மிக்க பொறிமுறையை உருவாக்கவேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

அநுராதபுரம் வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் விஜயம் 

Wednesday, March 12th, 2025 at 11:25 (SLT)

சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அநுராதபுரம் வைத்தியசாலைக்கு இன்று புதன்கிழமை (12) விஜயம் செய்துள்ளார். அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியர்களின் விடுதிக்குள் நுழைந்து நபரொருவர் பெண் வைத்தியர் ஒருவரை பாலியஸ் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இந்த சம்பவம் திங்கட்கிழமை (10) இரவு இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

விமானப் பயணிகள் , பணிப்பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல் : சந்தேக நபர் கைது

Wednesday, March 12th, 2025 at 11:20 (SLT)

இந்தியாவின் மும்பை நகரத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கிப் பயணித்த விமானத்தில் இருந்த விமானப் பயணிகள் மற்றும் பணிப்பெண்களை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் இன்று புதன்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கெக்கிராவையில் வலம்புரிச் சங்குடன் இருவர் கைது

Wednesday, March 12th, 2025 at 11:17 (SLT)

அநுராதபுரம் – கெக்கிராவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சூரியகம பிரதேசத்தில் வலம்புரிச் சங்குடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (11) காலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

50 மெற்றிக் தொன் சவூதி அன்பளிப்பு பேரீச்சம் பழங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன

Wednesday, March 12th, 2025 at 9:50 (SLT)

இனங்களுக்கிடையில் சுமுகத்தன்மையை உறுதிப்படுத்த அரசாங்கம் உரிய தலையீட்டை மேற்கொள்ளும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் (கலாநிதி) ஹினிதும சுனில் செனவி அவர்கள் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

பொதுஜன பெரமுண கட்சி ஊடாக மீண்டும் தேர்தல்களில் போட்டியிடுவேன் : லொஹான் ரத்வத்தை

Wednesday, March 12th, 2025 at 9:47 (SLT)

முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே மீண்டும் பொதுஜன பெரமுண கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார். இது தொடர்பில் கண்டி, மஹிய்யாவ பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பெருந்தோட்ட மக்களுக்கான சுகாதாரம், கல்வி உள்ளிட்ட வசதிகள் தொடர்பில் விசேட அவதானம் : நளிந்த ஜயதிஸ்ஸ

Wednesday, March 12th, 2025 at 9:44 (SLT)

பெருந்தோட்ட மக்களுக்கான சுகாதாரம், கல்வி உள்ளிட்ட வசதிகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

வைத்தியர்கள் இன்று வேலைநிறுத்தம்

Wednesday, March 12th, 2025 at 9:34 (SLT)

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று (12) நாடு தழுவிய வேலைநிறுத்தம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளது.நேற்றைய தினம் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பதிவான வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும் வாசிக்க >>>

எங்களுடைய மதம் சார்ந்த விடயங்களில் தலையிட வேண்டாம், தேவையான ஆணிகளை புடுங்குங்கள் : மொஹமட் சாலி நழீம்

Tuesday, March 11th, 2025 at 9:13 (SLT)

உங்கள் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள். எங்களுடைய பிரச்சினைகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்களுடைய மதம் சார்ந்த விடயங்களில் தலையிட வேண்டாம் என்று யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கேட்டுக்கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் சாலி நழீம், தேவையான ஆணிகளை புடுங்குமாறு கேட்டுக்கொண்டார்.

மேலும் வாசிக்க >>>

தேர்தல் காலத்தில் பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது சட்டவிரோதம் : கம்மன்பில குற்றச்சாட்டு

Tuesday, March 11th, 2025 at 9:10 (SLT)

தேர்தல் காலத்தில் பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வது சட்டவிரோதமானது என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பேருந்திலிருந்து தவறி விழுந்த நபரொருவர் உயிரிழப்பு

Tuesday, March 11th, 2025 at 9:07 (SLT)

ருவன்வெல்ல, ஹும்பஸ்வலான பகுதியில் ருவன்வெல்லவிலிருந்து தன்னோருவ நோக்கிப் பயணித்த பயணிகள் பேருந்தின் முன்பக்க மிதிபலகைக்கு அருகில் பயணித்த ஒருவர் பேருந்திலிருந்து விழுந்து உயிரிழந்தார். விபத்தைத் தொடர்ந்து அவர் கவலைக்கிடமான நிலையில் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

மேலும் வாசிக்க >>>

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பாமல் வைத்திருப்பது பாரதூரமான குற்ற செயலாகும்:சண்முகம் குகதாசன்

Tuesday, March 11th, 2025 at 9:01 (SLT)

ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பாமல் வைத்திருப்பது பாரதூரமான குற்ற செயலாகும் என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>