யாழில். வீட்டாருடன் முரண்பாடு வீட்டை விட்டு வெளியேறியவர் சடலமாக மீட்பு

Tuesday, March 31st, 2026 at 10:20 (SLT)

யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்கரை பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் கரையொதுங்கிய நிலையில் , மீட்கப்பட்டு , உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அல்வாய் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி குலசிங்கம் (வயது 78) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

எரிபொருள் ஒதுக்கீட்டை மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலாகக்குறைத்தனர் அமைச்சர்கள் : அமைச்சர் சந்தனா அபேரத்ன தகவல்

Tuesday, March 31st, 2026 at 10:17 (SLT)

அமைச்சரவை அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் தாமாக முன்வந்து தமது எரிபொருள் ஒதுக்கீடுகளை மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலாகக் குறைத்துள்ளதாக, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தனா அபேரத்ன தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

மட்டக்களப்பு கடத்தல் விவகாரம் – மயக்க மருந்து விநியோகித்தவருக்கு தடுப்புக்காவல்

Tuesday, March 31st, 2026 at 10:14 (SLT)

மட்டக்களப்பில் பெண்களைக் கடத்தி, மயக்க மருந்து கொடுத்து நகைகளை கொள்ளையிட்ட பின் கிணற்றில் வீசிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏழாவது சந்தேக நபரை, எதிர்வரும் 02ஆம் திகதி வரை பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி பேருந்தில் மோதி உயிரிழப்பு 

Tuesday, March 31st, 2026 at 10:12 (SLT)

கேகாலை, மொலகொட பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் நபர் ஒருவர் உயிரிழந்தார். கேகாலை – கொழும்பு வீதியில், கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றுடன், வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி ஒருவர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

தரமற்ற நிலக்கரி கொள்வனவு அமைச்சரவை தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதிக்கு இதில் பங்கிருக்கிறது : பாட்டலி சம்பிக்க ரணவக்க

Monday, March 30th, 2026 at 10:32 (SLT)

தரமற்ற நிலக்கரி கொள்வனவு தொடர்பில் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் நிலக்கரி நிறுவனத்தின் தலைவர் மீது மாத்திரம் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது. அமைச்சரவையின் தலைவரான ஜனாதிபதியும் இந்த மோசடியின் பங்காளியாக உள்ளார். அவரும் பொறுப்புக்கூற வேண்டும் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் மின்சாரத்துறை அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும்

Monday, March 30th, 2026 at 10:27 (SLT)

தற்போதைய சூழ்நிலையில் வலுசக்தியை வினைத்திறனாகவும் உரிய முகாமைத்துவத்துடனும் பயன்படுத்த வேண்டும் என இலங்கை நிலையான எரிசக்தி அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் டி.எம்.டபிள்யூ.ஜே. பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது : ட்ரம்ப்

Monday, March 30th, 2026 at 10:24 (SLT)

ஈரானின் எண்ணெயைக் கைப்பற்ற முடியும் என்றும், அந்நாட்டின் பிரதான எரிபொருள் மையமான கார்க் தீவை ஒருவேளை கைப்பற்றக்கூடும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

அமெரிக்காவின் அதிநவீன உளவுப் போர் விமானங்களை காலி செய்த ஈரான்

Monday, March 30th, 2026 at 10:19 (SLT)

சவுதி அரேபியாவில் உள்ள இளவரசர் சுல்தான் விமான தளத்தில் (Prince Sultan Air Base) ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், அமெரிக்காவின் அதிநவீன உளவுப் போர் விமானமான ‘E-3 சென்ட்ரி’ (E-3 Sentry) முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் குறைந்தது 12 அமெரிக்க வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் 5 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் 300 மில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த விமானம், எதிரி நாட்டு ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பாலேயே கண்டறியும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க >>>

இலங்கையின் இன்றைய காலநிலை பற்றிய அறிவிப்பு

Monday, March 30th, 2026 at 10:14 (SLT)

நாட்டில் நிலவும் வெப்பமான வானிலை தொடர்ந்தும் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் மேல் மற்றும் சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மேலும் வாசிக்க >>>

NPP எம்.பி பைசல் சென்ற கார் விபத்து

Monday, March 30th, 2026 at 9:32 (SLT)

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசால் பயணித்த கார், சிலாபம் பண்டாரவத்தை வளைவில் வீதியை விட்டு விலகி மதில் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஈரானின் அவசர எச்சரிக்கை : உலகிற்கு இடியாக மாறிய ரஷ்யாவின் திடீர் அறிவிப்பு

Sunday, March 29th, 2026 at 8:34 (SLT)

ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ரஷ்யா எடுத்துள்ள அதிரடி முடிவு சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஈரானில் தரைவழித் தாக்குதலுக்கு பென்டகன் தயார்

Sunday, March 29th, 2026 at 8:28 (SLT)

ஈரானில் தரைவழி இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொள்வதற்கு அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தயாராகி வருவதாக ‘வொஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இஸ்ரேலிய – அமெரிக்க பல்கலைக்கழகங்களை தாக்குவோம் : IRGC

Sunday, March 29th, 2026 at 8:25 (SLT)

மத்திய கிழக்கிலுள்ள இஸ்ரேலிய மற்றும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களை இலக்கு வைக்கப்போவதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர பாதுகாப்புப் படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இருவர் கட்டுநாயக்கவில் கைது

Sunday, March 29th, 2026 at 8:23 (SLT)

போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு உதவி மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்களை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

மணல் மாஃபியா பின்னால் அரசியல்வாதிகள் : கடற்தொழில் அமைச்சர் எச்சரிக்கை

Sunday, March 29th, 2026 at 8:21 (SLT)

வடக்கிலுள்ள மணல் மாஃபியாக்களுக்குப் பின்னால் சில அரசியல்வாதிகளும், சில பொலிஸ் உத்தியோகத்தர்களும் உள்ளனர் என்பது எமக்குத் தெரியும். கடந்த கால ஆட்சியாளர்களை ஏமாற்றியது போல, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தையும் ஏமாற்றலாம் என நினைக்க வேண்டாம். தவறு செய்யும் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>