கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள நேரில் வர வேண்டாம்

Friday, February 13th, 2026 at 8:15 (SLT)

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்லையில் உள்ள பிரதான அலுவலகம் மற்றும் ஏனைய அலுவலகங்களுக்கு சேவை பெறுவதற்காக பொதுமக்கள் இன்று (13) வருகைத் தருவதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Friday, February 13th, 2026 at 8:13 (SLT)

நாட்டின் இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இன்று (13) காலை இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள முன்னாள் பிரதி ஆணையாளர் கைது

Friday, February 13th, 2026 at 8:10 (SLT)

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின், கார் பதிவு பிரிவின் முன்னாள் பிரதி ஆணையாளர் ஒருவர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பொலிஸாரால் மற்றுமொரு துப்பாக்கிச் சூடு தமிழர் பகுதிகளில் தொடரும் பரபரப்பு இரவுகள்

Friday, February 13th, 2026 at 8:07 (SLT)

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு பகுதியில், நேற்று நள்ளிரவு கெப் ரக வாகனம் ஒன்றின் மீது பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. நள்ளிரவு 12.45 மணியளவில், சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனம் மீதே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தகவல் வழங்கியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கடந்த வருடம் நீரில் மூழ்கி சுமார் 388 பேர் உயிரிழப்பு – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

Thursday, February 12th, 2026 at 5:51 (SLT)

நாட்டில் நீர்நிலைகளை அண்டிய பகுதிகளில் நீரில் மூழ்கி உயிரிழப்பவர்கள் மற்றும் நீர்நிலைகளில் பதிவாகும் விபத்துகளின் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் கடந்த வருடம் மாத்திரம் நீரில் மூழ்கி சுமார் 388 பேர் உயிரிழந்துள்ளதுடன், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 24 பேர் மரணித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எப்.யு. வுட்லர் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

சட்டவிரோத விலங்கு தோல்களுடன் வர்த்தகர் கட்டுநாயக்கில் சிக்கினார்

Thursday, February 12th, 2026 at 5:45 (SLT)

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட விலங்குத் தோல்களுடன் 37 வயதுடைய வர்த்தகர் ஒருவர் புதன்கிழமை (11) கைது செய்யப்பட்டார்.

மேலும் வாசிக்க >>>

பிரித்தானியாவில் இலங்கை தமிழ் இளைஞன் அதிரடியாக கைது

Thursday, February 12th, 2026 at 1:05 (SLT)

பிரித்தானியாவில் யுவதியை பாலியல் சீண்டல் செய்த இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.சவுதாம்டன் பகுதியில், 19 வயது இளம்பெண் ஒருவருக்கு போதைப்பொருள் வழங்கி அவரை சீண்டல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

கொழும்பு – அஹமதாபாத் இடையே நேரடி விமான சேவை

Wednesday, February 11th, 2026 at 11:28 (SLT)

கொழும்புக்கும் இந்தியாவின் அஹமதாபாத்திற்கும் இடையே நேரடி விமான சேவைகளைத் ஆரம்பிப்பதற்கான திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.இவ்வருடம் ஏப்ரல் மாதம் முதல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஊடாக கொழும்புக்கும் அஹமதாபாத்திற்கும் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக சுற்றுலாத் துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மாத்தளை மாவட்டத்தில் நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம் 

Wednesday, February 11th, 2026 at 11:23 (SLT)

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை மாத்தளை மாவட்டத்தில் நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சாசனரக்ஷ சபையின் பிரதம பதிவாளர் முகுனுவெல அனுருத்த தேரர் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கனடாவில் பாடசாலையில் பதற்றம் : 10 பேர் சுட்டுக்கொலை மேலும் 25 பேர் படுகாயம்

Wednesday, February 11th, 2026 at 9:04 (SLT)

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்ப்ளர் ரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள மேல்நிலைப் பாடசாலையில் செவ்வாய்க்கிழமை மதியம் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

யாழ். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் திடுக்கிடும் பிரேத பரிசோதனை அறிக்கை

Wednesday, February 11th, 2026 at 8:24 (SLT)

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் உடற்கூற்றுப் பரிசோதனையில், துப்பாக்கிச் சன்னம் நெற்றியில் பாய்ந்து, தலைக்குள் ஊடுருவி மூளையைத் துளைத்துச் சென்றமையாலேயே மரணம் சம்பவித்துள்ளது எனத் தெரியவந்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

இலஞ்சம் பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் உட்பட இருவர் கைது

Wednesday, February 11th, 2026 at 6:28 (SLT)

தெஹியத்தகண்டி வலயக் கல்வி அலுவலகத்தில் கடமையாற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆசிரியர் ஆலோசகர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹியத்தகண்டி பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டிற்கு அமையவே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

இன்றைய வானிலை

Wednesday, February 11th, 2026 at 6:25 (SLT)

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் பெப்ரவரி 12ஆம் திகதியிலிருந்து மாற்றம் ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

சிங்கள அரசே பிக்குகளைச் சிறையில் அடைக்காதே திருகோணமலை நீதிவான் நீதிமன்றிற்கு முன் கடும் பதற்றம்

Tuesday, February 10th, 2026 at 8:06 (SLT)

திருகோணமலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 11 பேரினது விளக்கமறியல் நீடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருகோணமலை நீதிவான் நீதிமன்ற வளாகத்தின் முன்பாக திங்கட்கிழமை பெரும் பதற்றம் நிலவியது.

மேலும் வாசிக்க >>>

ஸ்ரீ ரெலோ கட்சியின் தலைவர் ப.உதயராசா கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்

Tuesday, February 10th, 2026 at 8:00 (SLT)

ஸ்ரீ ரெலோ கட்சியின் தலைவர் ப.உதயராசா கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அதன்படி, 7 நாட்கள் தடுப்புக் காவலில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>