நாடு பாரிய ஆபத்தை நோக்கித் தள்ளப்பட்டுள்ளது : சஜித் பிரேமதா

Sunday, March 29th, 2026 at 8:18 (SLT)

தற்போதைய அரசாங்கம் நாட்டின் நெருக்கடிகளை எதிர்கொள்ளத் தேவையான எந்தவொரு முறையான திட்டங்களையும் இதுவரை வகுக்கவில்லை என்றும், இதனால் நாடு பாரிய ஆபத்தை நோக்கித் தள்ளப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இலங்கையின் இன்றைய காலநிலை

Sunday, March 29th, 2026 at 8:15 (SLT)

சப்ரகமுவ மாகாணத்திலும் கொழும்பு, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மாலை 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவயில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஈரானுக்கு ஆதரவாக ஹூதிகளும் களமிறங்கினர் : இஸ்ரேல் மீது இரண்டு தாக்குதலை நடத்தினர்

Sunday, March 29th, 2026 at 8:10 (SLT)

ஈரான் போர் நடைபெற்று வரும் நிலையில் இஸ்ரேலுக்கு எதிராக ஏமனில் இயங்கும் ஈரான் ஆதரவு அமைப்பான ஹூதிகள் நேற்று தாக்குதலைத் தொடுத்துள்ளனர். 24 மணி நேரத்தில் இரண்டு தாக்குதல்களை அவர்கள் நடத்தியதாக அவர்கள் அறிவித்தனர்.
இஸ்ரேலுக்கு எதிராக இரண்டு தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும், மேலும் பல தாக்குதல்களை நடத்தப்போவதாகவும் ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

ஈராக் குர்திஸ்தான் அதிபரின் இல்லத்தின் மீது தாக்குதல்! கண்டிக்கிறது அமெரிக்கா

Sunday, March 29th, 2026 at 8:04 (SLT)

ஈராக் குர்திஸ்தான் அதிபரின் இல்லத்தின் மீதான தாக்குதலை அமெரிக்கா கண்டனம் செய்துள்ளது.ஈராக்கிய குர்திஸ்தான் தன்னாட்சிப் பிராந்தியத்தின் அதிபர் நெசிர்வான் பர்சானியின் இல்லத்தின் மீதான தாக்குதலை, ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவுப் போராளிக் குழுக்களே காரணம் என்று குற்றம் சாட்டி அமெரிக்கா சனிக்கிழமையன்று சந்தேகத்திற்கு இடமின்றி மற்றும் வலுவாக கண்டனம் தெரிவித்தது.

மேலும் வாசிக்க >>>

ஆயிரக்கணக்கான கடற்படையினருடன் வந்தது அமெரிக்காவின் திரிப்போரி தாக்குதல் கப்பல்

Sunday, March 29th, 2026 at 8:00 (SLT)

அமெரிக்கத் தாக்குதல் கப்பல் ஆயிரக்கணக்கான கடற்படை வீரர்களை மத்திய கிழக்குக்குக் கொண்டுவந்தது.சுமார் 3,500 மாலுமிகள் மற்றும் கடற்படை வீரர்களை ஏற்றிக்கொண்டு, யுஎஸ்எஸ் திரிபோலி என்ற நீர்நிலத் தாக்குதல் கப்பல் மத்திய கிழக்கு வந்தடைந்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் நேற்று சனிக்கிழமை அன்று தெரிவித்தது.

மேலும் வாசிக்க >>>

சவூதி விமானப்படை தளத்தின் மீதான தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகிது

Saturday, March 28th, 2026 at 23:13 (SLT)

சவூதி விமானப்படைத் தளம் மீதான தாக்குதலில் பல அமெரிக்க வீரர்கள் காயமடைந்ததாக , ஒரு வட்டாரம் வெள்ளிக்கிழமை அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் தெரிவித்தது.

மேலும் வாசிக்க >>>

இந்த வாரம் ஈரானுடனான சந்திப்பு நடைபெறும் என விட்காஃப் நம்பிக்கை

Saturday, March 28th, 2026 at 7:42 (SLT)

இந்த வாரம் ஈரானுடனான சந்திப்பு நடைபெறும் என விட்காஃப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் வெள்ளிக்கிழமை அன்று, இந்த வாரம் ஈரானுடன் சந்திப்புகள் நடைபெறும் என அமெரிக்கா நம்புவதாகக் கூறினார்.

மேலும் வாசிக்க >>>

ஈரானின் இரும்புத் தொழிற்சாலைகளையும் மின் நிலையத்தையும் தாக்கியது இஸ்ரேல்

Saturday, March 28th, 2026 at 7:38 (SLT)

ஈரானின் இரண்டு மிகப்பெரிய இரும்புத் தொழிற்சாலைகள் ஒரு மின் நிலையம் மற்றும் பொதுமக்கள் அணுசக்தித் தளங்கள் உள்ளிட்ட ஈரானிய உள்கட்டமைப்புகளை இஸ்ரேல் குறிவைத்துள்ளது என்று ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி வெள்ளிக்கிழமை இணையத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

மட்டக்களப்பில் பெண்களை கடத்தி கொலை செய்து கும்பலிடம் இருந்து சத்திர சிகிச்சைக்கு பாவிக்கும் மயக்க மருந்துகள் மீட்பு : ஒருவர் கைது

Friday, March 27th, 2026 at 8:04 (SLT)

மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மயக்க மருந்து கொடுத்து பெண்களை கடத்தப்பட்டு தாலி உள்ளிட்ட தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு கிணற்றில் வீசி எறிந்து கொலை செய்து வந்த கும்பலுடன் தொடர்புபட்ட மற்றுமொரு சந்தேக நபரான 37 வயதுடைய ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை வியாழக்கிழமை (26) இரவு மயக்கத்துக்கு பாவிக்கும் ஸ்பிரே யருடன் கைது செய்ததுடன் கொள்ளைச் சம்பவத்துக்கு பயன்படுத்தி வந்த சத்திர சிகிச்சைக்கு பாவிக்கும் மயக்க மருந்துகள் மற்றும் ஸ்பிரே,மாத்திரைகள் என்பவற்றை மீட்டுள்ளதாக கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

ஈரான் 10 எண்ணெய் கப்பல்களை அனுமதித்தது : இதை ‘பெரிய பரிசு’ என்கிறார் டிரம்ப்

Friday, March 27th, 2026 at 7:57 (SLT)

பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு நேர்மறையான பதிலளிப்பாக, ஹோர்முஸ் நீரிணை வழியாக 10 எண்ணெய் கப்பல்களை ஈரான் செல்ல அனுமதித்துள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க >>>

ஈரானிய எரிசக்தி ஆலைகள் மீதான தாக்குதல்களை நிறுத்தி வைப்பதை அமெரிக்கா நீட்டிக்கும் : டிரம்ப்

Friday, March 27th, 2026 at 7:01 (SLT)

மின் உற்பத்தி நிலையங்களை அழிக்கும் காலகட்டத்தை 10 நாட்களுக்கு ஏப்ரல் 6 வரை அமெரிக்கா இடைநிறுத்தும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மதுரோவின் மகன் பரபரப்பு பேட்டி : அமெரிக்க சட்ட அமைப்பின் மீது நம்பிக்கை

Friday, March 27th, 2026 at 6:58 (SLT)

அமெரிக்கச் சிறப்புப் படைகளால் கடந்த ஜனவரி மாதம் வெனிசுலாவிலிருந்து அதிரடியாகக் கொண்டு வரப்பட்ட முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ, தற்போது நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் ‘நார்கோ-டெரரிசம்’ (Narco-terrorism) உள்ளிட்ட வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார். இந்நிலையில், அவரது மகனும் வெனிசுலா நாடாளுமன்ற உறுப்பினருமான நிக்கோலஸ் மதுரோ குவேரா (நிகோலசிட்டோ), அமெரிக்கச் சட்ட அமைப்பின் மீது தங்களுக்குத் தார்மீக ரீதியான நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்துள்ளார். எனினும், தனது தந்தை ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் என்றும், அவரைச் சட்டவிரோதமாக அமெரிக்கா ‘கடத்தி’ வந்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

இன்றும் வறட்சியான வானிலை

Friday, March 27th, 2026 at 6:53 (SLT)

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

காலம் கடப்பதற்குள் தீவிரமாகச் செயல்படுங்கள் : டிரம்ப்

Thursday, March 26th, 2026 at 21:25 (SLT)

தனது 15 அம்ச சமாதான முன்மொழிவுக்கு ஈரான் அளித்த பதிலில் அமெரிக்க அதிபர் அதிருப்தி தெரிவித்திருந்தார். தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்ட மற்றொரு பதிவிலேயே அவர் இக்கருத்தை வெளியிட்டார். அவர் ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்களை வித்தியாசமானவர்கள் மற்றும் விசித்திரமானவர்கள் என்று குறிப்பிட்டார்.

மேலும் வாசிக்க >>>

நாளை கருணைக்கொலை செய்யப்படவிருக்கும் இளம்பெண்

Thursday, March 26th, 2026 at 21:20 (SLT)

ஸ்பெயின் நாட்டு இளம்பெண்ணொருவர் கருணைக்கொலை செய்யப்பட ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றமும் ஸ்பெயின் அரசியல் சாசன நீதிமன்றமும் அனுமதியளித்துள்ளதைத் தொடர்ந்து, நாளை அவர் கருணைக்கொலை செய்யப்பட உள்ளார்.

மேலும் வாசிக்க >>>